districts

img

விருதுநகரில் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.48 லட்சத்தில் மோட்டார் வாகனங்கள்

அமைச்சர்கள் வழங்கினர் விருதுநகர், மார்ச் 26- விருதுநகரில் மாற்றுத்திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்  தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ். எம்.குமார்,   சட்டமன்ற உறுப்பினர்கள்   சீனி வாசன் (விருதுநகர்), எஸ்.தங்கப்பாண்டி யன் (இராஜபாளையம்), சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்பு,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும்  தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்  வர்த்தகத்துறை அமைச்சர்  தங்கம் தென்ன ரசு ஆகியோர் 57 மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.47லட்சத்து 59ஆயிரத்து 500  மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனங்களை வழங்கினர். மேலும் இதில்,சிவகாசி கோட்டாட்சியர்  விஸ்வநாதன், ஆட்சியரின் நேர்முக உதவி யாளர்(பொது)  சிவக்குமார், மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர்  சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.