மதுரை, டிச.26- மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). இவர் அப்பகுதியில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மேலவளவு அருகே உள்ள சாம்பி ராணிபட்டியில் உள்ள தோட்டம் சம்மந்தமாக அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கார் மேகம் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் டிச.18-ஆம் தேதி சுரேஷ் தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பியபோது, அவரை வழி மறித்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. மதுரை மேலவளவு காவல்துறையினர் குற்றவாளிகளை டிச.26-ஆம் தேதி வரை கைது செய்யவில்லை. இதையடுத்து சுரே ஷின் மனைவி ஜெய கௌசல்யா, மகள் புஷ்பா ஸ்ரீ, சரேஷின் தாயார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சாம்பிராணிபட்டி கிராம மக்களு டன் வந்து, சுரேஷின் கொலைக்கு கோபால கிருஷ்ணன், கார்மேகம் உள்ளிட்ட ஒன்பது பேர் தான். அவர்களை இன்னும் கைது செய்யவில்லை. சுரேஷ் கொலைக்கு நீதி வேண்டுமென கதறி அழு தனர். காவல்துறையினர் அவர்களை ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.