மதுரை, ஆக. 16- மதுரை அழகா்கோவில் சாலை அவுட்போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் காம ராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியரும் துறைத் தலைவரும் மூட்டா நிர்வாகியுமான ஏ.டி.செந்தாமரை கண்ணன் மீது கல்லூரியின் துணை முதல்வர் கபிலன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்று மூட்டா வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மூட்டா பொதுச் செயலாளர் பேரா மு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மணிப்பூர் கலவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி போராட்டங் களை பலரும் முன்னெடுத்தும் வரும் சூழ லில், மதுரையில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, ஜனதாய ரீதியான போராட்டங்கள் நடத்த முனைந்தனர்.அப்போது, அக்கல்லூரிப் பேராசிரியர் பி. கபிலன் மாணவ மாணவியர்களை ஒருமை யில் அநாகரீகமாக பேசியதுடன், விரல் நீட்டி அச்சுறுத்தல் விடுத்து போராடக் கூடாது என்று மிரட்டிப் போராட்டத்தைக் கலைத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஆளும் கட்சிக்கு ஆத ரவான நபராக தன்னைக் காட்டிக் கொள்கிறார். ஆனால் உண்மையில் அதற்கு எதிராக செயல் பட்டு வருகிறார்,
இதன் பின்னர், மாணவர்களை மிரட்டுவது உள்ளிட்டு பேரா பி. கபிலன் மீது வகுப்புகள் எடுக்காதது, ஊழல் என பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளரிடம் இந்திய மாணவர் சங்கம் புகார் அளித்திருக்கி றது. அதே கல்லூரியில் பணி புரிந்து வரும் மூட்டா பேரியக்கத்தின் தலைவரும், கல்லூரி வணிக வியல் துறையின் இணைப்பேராசிரியரும் துறைத்தலைவகுமான பேரா. ஏ. டி. செந்தா மரை கண்ணன் ஆகஸ்ட் - 15 சுதந்திர தின தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு சென்றுள் ளார். அப்போது மாணவர்களின் குற்றச்சாட்டு களுக்கு உள்ளான பேரா. பி.கபிலன், மூட்டா தலைவரிடம் வந்து புகார் தொடர்பாக ஒருமை யில் பேசி தகராறு செய்துள்ளார். அதற்குத் தலைவர் ‘என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்? மாண வர்களிடம் பேசுங்கள்’ என்று பதிலளித்து உள்ளார். பேசிக்கொண்டு இருக்கும் போதே பேரா.கபிலன், செந்தாமரைக்கண்ணனை நோக்கி ‘உன்னைக் கொன்று விடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.
மேலும், முகத்தில் தாக்கியது டன் நாற்காலியை தூக்கி அடித்துள்ளார். செந்தா மரை கண்ணன் காதில் ஏற்பட்ட காயம் காரண மாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய பேரா. கபிலனை உடனடி யாகக் கைது செய்வதுடன் அவர் மீது துறை ரீதி யான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்ற வியல் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாண வர்களின் புகார்கள் மீதான நடவடிக்கை வேண்டி யும் மூட்டா தொடர் போராட்டங்களின் ஈடுபடு வது என்று முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது சங்கத்தின் துணைத் தலைவர் பேரா. எம். உமையவள்ளி, பொருளாளர் பேரா. ஆர். ராஜா ஜெயசங்கர் ஆகி யோர் உடனிருந்தனர்.