சிறுத்தை நடமாட்டம் கேமிரா மூலம் கண்காணிப்பு
தேனி, நவ.9- பெரியகுளம் கைலாசபட்டி மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வனத்துறை சார்பில் 3 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டி அருகே சொர்க்கவனம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இப்பகுதி தோட்டத்து மின்வேலியில் சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு கைலாச நாதர் கோயில் கிரிவலப்பகுதியில் கடமானை சிறுத்தை தாக்கி கொன்றது. விவசாயிகள் நடமாட்டமும்,கால்நடை வளர்ப்பும் இப்பகுதியில் அதிகம் என்பதால் சிறுத்தையை கண்கா ணித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சிறுத்தை நடமாடும் பகுதி களை கண்டறிவதற்காக இப்பகுதியின் வெவ்வேறு இடங்களில் 3 கண்காணிப்புக் கேமராக்களை வனத்துறை யினர் புதனன்று பொருத்தினர்.
கண்மாயிலிருந்து நீர் வெளியேறும் பாதையை சீர் செய்திடுக! பொது மக்கள் வலியுறுத்தல்
விருதுநகர், நவ.9- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கடம்பன்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் பாதைகளை சீரமைத்திட வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியதாவது : சிவகாசி அருகே உள்ளது நேரு காலனி, விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி, கீழத் திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறோம். இங்கு கடம்பன்குளம் கண்மாய் உள்ளது. அதன் கிழக்கு பகுதியில் பள்ளபட்டி கிராமம் உள்ளது. இந்நிலையில், கண்மாயில் கோழிக் கழிவுகள், சாக்கடை கழிவுகள் விடப்படுகின்றன.தற்போது பெய்த மழையின் காரணமாக கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. ஆனால், நீர்வழிப் போக்குகளில் ஆக்கிரமிப்புகள் உள்ள தால், தண்ணீர் கண்மாயில் இருந்து வெளியேறவில்லை. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, பெரும் சுகா தார சீர்கேடு ஏற்பட்டு குடியிருப்புவாசிகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
கரந்தமலை அருவியில் கொட்டும் தண்ணீர்
நத்தம், நவ.9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது உலுப்பகுடி கிராமம். இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் கரந்தமலை உள்ளது. இந்த மலையில் உள்ள சிற்றரு வியில் தன்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. மலையில் மூலிகை செடிகள் அதிகம் வளர்ந்துள் ளன. நத்தம் பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிற்றருவி யில் திடீர் நீர்வரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சரக்கு வாகனம் மோதி மாணவன் பலி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திண்டுக்கல், நவ.9 திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள சின்னாளபட்டி மேட்டுப்பட்டி சேர்ந்த செல்வபாண்டி என்பவரது மகன் தினேஷ் (17). தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஆறு முகம் என்பவரது மகன் கதிரவன் (17). இவர்கள் இருவரும் சின்னாளபட்டி தேவாங்கர் அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்ற னர். வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த சாம்சோன் என்பவ ரது மகள் ஸ்டெல்லா மேரி (18). சின்னாளபட்டியில் மருத்து வமனையில் பயிற்சி செவிலியராக இருந்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று இரவு ஒரே இருசக்கர வாக னத்தில் மூவரும் சென்றனர். திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலை எ. வெள் ளோடு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் வேகமாக மோதியது. இதில் டூவீலரை ஓட்டி வந்த கதிரவன் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த தினேஷ் மதுரை அரசு மருத்துவ மனையிலும் ஸ்டெல்லா மேரி திண்டுக்கல் தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள னர். இச்சம்பவம் குறித்து அம்பாத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விடுதியில் தங்கிய மாணவர்கள் எவ்வாறு விடுதியை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேற யார் அனுமதி கொடுத்தது என்று இறந்த பள்ளி மாணவ னின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர் வடக்கு போலீ சார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர்.
குரூப் தேர்வில் தேர்ச்சிபெற்றோர் சிவகங்கை ஆட்சியருக்கு நன்றி
சிவகங்கை, நவ.9- சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன ரெட்டியின் முன் முயற்சியில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை ஆகிய மையங்களில் டிஎன்பிசி தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது. இலவச பயிற்சி பெறுகிற இளைஞர்களுக்கு ஏராள மான புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூ தன்ரெட்டி வழங்கி இருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபத்திலும், சிவ கங்கையில் ரயில் நிலையம் அருகில் உள்ள தன்னார்வப் பயிலகத்திலும் டிஎன்பிசி தேர்வு எழுதும் இளை ஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் படித்து தேர்வு எழுதிய 40 பேர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த மெயின் தேர்வுக்கு தயா ராகி உள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டிக்கு குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாண வர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நவம்பர் புரட்சி தின பேரவை
திண்டுக்கல், நவ.9- திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு பேரவை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி சிறப்புரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில் 17 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சிக்கு கட்சியின் தொப்பம்பட்டி ஒன்றி யச்செயலாளர் கனகு தலைமை வகித்தார். முன்னாள் பழனி நகர் மன்றத்தலைவர் வி.இராஜமாணிக்கம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எம். ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். (நநி)
வடமாநில தொழிலாளியை தாக்கியவர் கைது
தேனி, நவ.9- போடி சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிக்குச் செல்லா மல் போடி பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனர். ஒருகட்டத் தில் பெற்றோருக்கு பயந்த இவர்கள் தாங்கள் கடத் தப்பட்டதாக மொபைலில் பொய் கூறினர். இத்தகவல் அப்பகுதியில் பரவியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெட்சீட் விற்றுக் கொண்டி ருந்த மத்தியபிரதேசம் பிப்லோடா பகுதியைச் சேர்ந்த திலீப்(25) என்பவரை பொதுமக்கள் தாக்கினர். போலீஸ் விசாரணையில் உண்மை விவரம் தெரிந் தது. இந்நிலையில் திலீப்பை தாக்கியதாக சில்ல மரத்துப்பட்டியைச் சேர்ந்த பாண்டி(35) என்பவரை போடி தாலுகா போலீஸார் கைது செய்தனர்.
ரூ.15 லட்சம் போலி மதுபானங்கள் பறிமுதல்
மதுரை, நவ.9- மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி யில் போலியாக மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்களை மத்திய நுண்ணறிவு காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அரியலூரில் 350 மதுபானங்கள் விற்ற மோகன் என்ப வரை கைது செய்து மத்திய நுண்ணறிவு காவல்துறை விசாரணை நடத்திய போது கொட்டாம்பட்டி பகுதியில் போலி மதுபானங்கள் வைத்திருப்பதாக தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் கொட்டாம்பட்டியில் தென்னந்தோப்பு பகுதியில் போலிமதுபானங்கள் தயா ரிக்க வைத்திருந்த ஸ்பிரிட், ஆல்காலிக் மீட்டர், மது பான ஸ்டிக்கர் மற்றும் மூடிகள் மதுபான மூலப்பொருட் கள் இருப்பது தெரியவந்தது. சுமார் 15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மத்திய நுண்ணறிவு காவல்துறை மற்றும் மேலூர் மதுவிலக்கு காவல்துறை இதுதொடர்பாக ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டு சம்பவம்
பொதுமக்கள் அதிர்ச்சி
பொதுமக்கள் அதிர்ச்சி விருதுநகர், நவ.9- மாவட்டத் தலைநகரான விருதுநகரில் சமீப காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். விருதுநகர் பகுதியில் கடந்த நவம்பர் 8 அன்று அதிகாலை அடுத்தடுத்து 12 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில், காமராஜர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் விறகு கடை யின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணப் பெட்டியைத் திறந்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், கட்டையாபுரம் பகுதியில் வீட்டின் முன்பு இருந்த ஒருவ ரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். மேலும், பாத்திமா நகர் பிரதான சாலையில் உள்ள தெருக்களுக்குள் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். அங்கு ஏதும் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள ஜவுளிக் கடை யின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பாத்திமாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் உள்ளே செல்லும் காட்சி அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகனின் வீட்டு கண்காணிப்புக் கேமிராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த நபர் எவ்வித பதற்றமும் இன்றி கையில் ஒரு டார்ச் லைட் மற்றும் ஒரு இரும்பு கம்பியுடன் வந்து சாதுர்யமாக பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே செல்கிறான். இதுகுறித்து சிபிஎம் நகர் செயலாளர் எல்.முரு கன் கூறுகையில், பொதுவாக கடந்த காலங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் அதிக அளவில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள். சமீப காலமாக காவல்துறையினரின் இரவு நேர ரோந்துப் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பொது மக்களே தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகத்தான், திரு டர்கள் இரவு நேரத்தில் எவ்வித அச்சமும் இன்றி தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்ற னர் எனவும் கூறுகின்றனர். விருதுநகரில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 12 இடங்களில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதாக உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட காவல்துறை, விருதுநகர் நகர் பகுதியில் ரோந்துப் பணிகளை காவல்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும். பொது மக்களிடம் ஏற் பட்டுள்ள அச்ச உணர்வை போக்கிடும் வகையில் தங்களது செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேற்படி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அனை வரையும் விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது இடுக்கி மாவட்டத்திற்கு முதல் அபாய எச்சரிக்கை
தேனி, நவ.9- முல்லைப் பெரியாறு அணைநீர்மட்டம் 136அடி யாக உயர்ந்ததைத் தொட ர்ந்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை யினால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியி்ல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த மாத இறுதியில் 134அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படி யாக உயர்ந்து நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு 136அடியை எட்டியது. நீர் வரத்து விநாடிக்கு 2ஆயி ரத்து 274கனஅடியாக உள் ளது. நீர்மட்டம் 136அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து கேரளப்பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழகப்பகுதிக்கு 4 ராட்சத குழாய்கள் வழியே விநாடிக்கு ஆயிரத்து 600 அனஅடியும், இரைச்சல் பாலம் வழியே ஆயிரம் கன அடி என அதிகபட்சம் 2 ஆயி ரத்து 600 கனஅடிநீர் திறக்க முடியும். அவசர தருணங்க ளில் அதிகபட்ச நீரை கேர ளப்பகுதி வழியேதான் திறக்க முடியும் என்பதால் முதல் எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கேரளப்பகுதி வழியே அதிகப்படியாக தண்ணீரை வெளியேற்றும் போது வல்லக்கடவு, சப் பாத்து, வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்த கரை யோர பகுதி மக்களின் பாது காப்புக்காக அறிவிப்பு வெளியிடப்படுவது வழக் கம். நீர்மட்டம் தொடர்ந்து உயரும்பட்சத்தில் அடுத்த டுத்த அறிவிப்புகள் வெளி யிடப்படும் என்றனர். தற்போது தேனி மாவட்டத்தில் பருவமழை பெய்வதுடன், முதல்போக அறுவடைபணி நடைபெறு வதால் நீரின் தேவை குறை வாக உள்ளது. ஆகவே நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511அடியாக குறைக்கப் பட்டுள்ளது. இதனால் நீர் மின்உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.