districts

சிங்கம்புணரியில் 13 ஆவது நாளாக தொடரும் எம்எம்எப் தொழிலாளர்கள் போராட்டம்

சிவகங்கை, பிப்.7-  சிவகங்கை மாவட்டம் சிங் கம்புணரியில் உள்ள எம்எம்எப் போர்டிங் கம்பெனியில் வேலை செய்யக் கூடிய தொழிலாளர் களை பழிவாங்கும் நோக்கோடு மாறுதல் செய்ததை ரத்து செய்ய வேண்டும், அப்ரண்டிஸ் மீது நட வடிக்கை எடுக்கக் கூடாது என் பதை வலியுறுத்தி சிங்கம்புணரி யில் 13வது நாளாக பொது தொழி லாளர் சங்கம் (சிஐடியு) தலைமை யில் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.  இதுதொடர்பாக சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா, மாவட்டச் செயலாளர் சேது ராமன், பொது தொழிலாளர் சங் கத்தின் பொதுச்செயலாளர் வேங் கையா, தொழிலாளர்கள் ராஜா, விஷ்ணு, மூக்கையா, பொன் ராஜ், இளந்திரையன், முருகன் உள்ளிட்ட 300 தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.  இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொழிற்சாலை நிர்வாக தரப்பை யும், தொழிலாளர் நலத்துறையை யும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வர உத்தரவிட்டார். இதன்பின்பு தொழிலாளர்களும் தொழிற்சங் கத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரய்யா, மாவட்ட செய லாளர் சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் வேங்கையா, சிங்கம் புணரி எம்.எம்.எப் தொழிற்சங்க தலைவர்கள் ராஜா, விஷ்ணு, மூர்த்தி, சின்னச்சாமி, மூக் கையா, முருகன் பொன்ராஜ், இளந்திரையன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.சாமுவேல் ராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, ஒன்றிய செயலாளர் உல கநாதன், ஒன்றியக்குழு உறுப்பி னர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் விசுவநாதன், கலை யரசன் கருப்பையா, முத்துகருப் பன், ஜேம்ஸ், தர்மராஜ் உள் ளிட்டோர் பேசினர்.