districts

img

மாவட்ட ஆட்சியரை பாராட்டிய அமைச்சர்கள்

விருதுநகர், அக்.5- சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பள்ளி கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு சிறந்த மாவட்ட ஆட்சி யர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் ஆட்சியர் ஜெயசீலன் விருதினை காண்பித்தார். இதையடுத்து, அமைச்சர்கள் இருவரும் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.