districts

img

கருணைக்கொலைக்கு விண்ணப்பித்த திருநங்கை அனீரா கபீருக்கு வேலை வழங்க அமைச்சர் நடவடிக்கை

திருவனந்தபுரம், ஜன.12- மாற்றுப்பாலினத்தவராக வாழ முடியாது எனக் கூறி கருணைக் கொலை க்கு  சட்டப் பணிகள் ஆணையத்தில் விண்ணப்பித்த அனீரா கபீரிடம் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தொலை பேசியில் பேசியதுடன் வேலை கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். மாற்றுப்பாலினத்தவராக, பணி புரிந்து கண்ணியமாக வாழ அனு மதிக்கப்படவில்லை என்றும், பாலக் காட்டில் உள்ள அரசுப் பள்ளியில் தற் காலிக ஆசிரியர் பணியை இழந்துவிட்ட தாகவும் அனீரா அப்போது அமைச் சரிடம் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன் தனது சகோதரர் விபத்தில் இறந்து விட்டதாகவும், குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் அமைச்சரிடம் அனீரா கூறினார். அனி ராவின் குடும்பப் பின்னணி மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.  இரண்டு முதுநிலைப் பட்டங்கள், ஒரு எம்.எட் மற்றும் செட்டும் படித்திருப்பதாக அனீரா கூறினார். இப்பிரச்னை தொடர்பாக பாலக் காடு கல்வி துணை இயக்குநரிடம் அமைச்சர் தொலைபேசியில் பேசினார். அனீராவுக்கு இழந்த பணியை மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கை எடு க்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.  அனீராவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்க டியைச் சுட்டிக்காட்டி விரிவான மனுவை அளிக்குமாறு அமைச்சர் வி.சிவன் குட்டி கேட்டுக்கொண்டார். திருவனந்த புரத்தில் அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக அனீரா தெரி வித்தார். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த அனீரா அமைச்சர் வி.சிவன்குட்டியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தனது கோரிக்கையை தெரிவித்தார்.