districts

img

கீழராங்கியத்தில் திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

சிவகங்கை, ஜூலை 16-  சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கீழராங்கியம் கிராமத்தில் மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட திருப்பு வனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலை யத்தை ஜுலை 16 ஞாயிறன்று தமிழக  கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.  இப்பகுதியில் உற்பத்தியாகிற பாலை கொள்முதல் செய்து சேமித்து வைத்து, பின்னர் ஆவினுக்கும் விற்ப னைக்கும் பயன்படுத்துவதற்கு இந்த  பால் குளிரூட்டும் நிலையம் உருவாக்  கப்பட்டுள்ளது. இதனை அமைப்ப தற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார் தனது தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து 16 லட்சத்து 43 ஆயிரம் வழங்கினார். ரூ.20 லட்சம்  ஆவின் நிர்வாகத்தில் இருந்து வழங்கப்  பட்டுள்ளது.  இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலை மையில் நடைபெற்றது. தமிழக கூட்டு றவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்,

திருப்புவனம் பேரூராட்சி தலைவரும் ஆவின்பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் தலைவருமான சேங்கை மாறன் மற்றும் பலர் பேசினர். பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கஇடம் கொடுத்த சேகரை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சால்வை அணிவித்து பாராட்டினார்.  விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில்,திருப்புவனம் பேரூராட்சி தலைவரும், பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரு மான சேங்கை மாறன் பொறுப்புக்கு வந்த பின்பு பால் உற்பத்தி உயர்ந்துள்  ளது. இதனைச் செய்த சேங்கை மாறனை பாராட்டுகிறேன். கடந்த ஆட்சி யில் இருந்ததை விட பல மடங்கு அதி கரித்து 9 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி  ஆகிறது. இதில் 5 ஆயிரம் லிட்டர் பால் ஆவினுக்கு வழங்கி வருகின்றனர். குளிரூட்டும் நிலையம் அமைவதற்கு 12 சென்ட் இடம் வழங்கிய திமுக  பொறுப்பாளர்சேகரை பாராட்டு கிறேன். பால் குளிரூட்டும் மையத்தால்  34 கிராம விவசாயிகள், பால் உற்பத்தி யாளர்கள் பயன் பெறுகின்றனர் என்று  கூறினார். விழாவில் மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட அறநிலையத்துறை உறுப்பி னர் ஜெயமூர்த்தி, மானாமதுரை திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, சேகர்,கூட்டுறவுத் துறை இணைப்பதி வாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி யின் பொதுமேலாளர் மாரிச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், நாகூர் கனி, கடம்பசாமி மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.