சிவகங்கை, ஜூலை 23- சிவகங்கை நகராட்சி பகுதியில் கடந்த இரண்டாண்டுகளில் மொத்தம் 46 வளர்ச்சித் திட்டப்பணிகள் ரூ.22.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 3 வளர்ச்சித் திட்டப்பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலு வலர் ப.மணிவண்ணன் தலைமை வகித் தார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் கடந்த இரண்டாண்டுகளில் 2021-2022 ஆம் நிதியாண்டில் 26 வளர்ச்சித் திட்ட பணி கள் ரூ.7.83 கோடி மதிப்பீட்டிலும், 2022- 2023 ஆம் நிதியாண்டில் 20 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.14.56 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 46 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ. 22.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது வார்டு எண்:4 பகுதியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் மரா மத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இராமசந்திரனார் பூங்கா, வார்டு எண்: 21-இல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022 இன் கீழ் ரூ.134 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட செக்கடி ஊரணியினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட் டில் மராமத்து பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ள சண்முகராஜா கலைய ரங்கம் என சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.153.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற் கென அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். சிவகங்கை நகராட்சியில் பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செய்யாத வளர்ச்சித் திட்டப்பணிகளை நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் சிறப்புடன் செயல் படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பன் பாராட்டிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரை ஆனந்த், நக ராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஸ், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் உலகநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் சேதுநாச்சியார், அயூப்கான் ,ஜெயகாந்தன் மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பி னர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந் தில்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரெத்தி னம் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.