districts

img

பால் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துரையாடல்

திருவில்லிபுத்தூர், ஜூலை 1-  விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வாணியர் மஹாலில், மாவட்ட கூட்டு றவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலை மையில் பிரதம பால் உற்  பத்தியாளர் சங்க செயலா ளர்கள், துணைப்பதிவாளர் கள், ஒன்றிய அலுவலர்களு டனான கலந்தாய்வு கூட்டம் வெள்ளியன்று நடைபெற றது. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்  தில், பால் உற்பத்தியாளர் களிடம் பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிந்து, முத லமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார். பின்னர் 17 பால் உற்பத்தி யாளர்களுக்கு தலா ரூ.1 லட்  சம் வீதம் மொத்தம் ரூ.17 லட் சம் மதிப்பில் கறவை மாடு  வாங்குவதற்கான கடன் களையும், 15 பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கங்  களை சேர்ந்த பயனாளி களுக்கு பால் உற்பத்தியை பெருக்குவதற்கான விதை  பைகளையும்,

4 புதிய பிரதம  பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு சங்கங்களுக்கு பதிவு  சான்றிதழ்களையும், கோபா லபுரம் மற்றும் கல்லமநாயக் கன்பட்டி பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கங்க ளில் 2022- 2023 ஆம் ஆண்டு அங்கத்தினரை சேர்ந்த பய னாளிகளுக்கு மொத்தம் ரூ. 3.17 லட்சம் மதிப்பிலான ஆத ரவளிக்கும் தள்ளுபடி விலை  தொகையினையும், திரு வில்லிபுத்தூர் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்  தைச் சேர்ந்த 50 பால் உற்  பத்தியாளர் பயனாளி களுக்கு ஆதரவளிக்கும் தள்ளுபடி தொகை ரூ.51.90 லட்சம் பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் செயலாற்றிய 6  உற்பத்தியாளர் சங்கங்க ளுக்கும், 3 சிறந்த பால் விற்  பனை முகவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும்  கேடயங்களையும் அமைச் சர் வழங்கினார். முன்னதாக திருவில்லி புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட்., ஆலையில், பால்  குளிரூட்டப்படும் அறை, பன்னீர், பால்கோவா, நெய்,  பாதாம் பவுடர், சுவை யூட்டப்பட்ட பால் பொருட்  கள் உற்பத்தி செய்யப்படும் முறைகள் குறித்து அமைச் சர் ஆய்வு செய்தார். பொருட்களை தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் எனவும், உற்பத்தி யை பெருக்குவது, சந்தைப்  படுத்துதல் குறித்து ஆலோ சனைகள் மற்றும் அறிவுரை களை சம்பந்தப்பட்ட அதி காரிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வுகளில் இராஜ பாளையம் சட்டமன்ற உறுப்  பினர் எஸ்.தங்கப்பாண்டி யன், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் .மல்லி கு.ஆறு முகம், ஆவின் பொது மேலா ளர் ஷைக் முஹம்மது ரபி,  துணைப்பதிவாளர் (பால் வளம்) நவராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.