districts

img

தமிழகத்தில்தான் அதிகமான சுகாதார நிலையங்கள் உள்ளன

திண்டுக்கல்,  ஏப்.4- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்களும்,  துணை சுகாதார நிலையங்க ளும் உள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ரூ119.6 கோடி செலவில்  500 படுக்கைகள் கொண்ட புதிய  கட்டிடத்தை  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:  துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றித்தர வேண்டும் என்பார்கள். ஆரம்ப சுகாதாரம் என்றால் வட்டார மருத்துவமனையாக மாற்றித்தர வேண்டும் என்பார்கள். வட்டார மருத்துவமனை என்றால் மாவட்ட அரசு மருத்துவமனையாக மாற்றித்தர வேண்டும் என்பார்கள். மாவட்ட அரசு மருத்துவமனையாக இருந்தால் அதை உடனடியாக மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக மாற்றித்தர வேண்டும் என்பார்கள். எல்லோருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் நிதி ஆதாரம் என ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் 8713 துணை சுகாதார நிலையங்களும் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. இந்தியாவிலேயே அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்களும்,  துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவ நிர்வா கங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவித்தி ருக்கிறோம். ஏற்கனவே கொரோனா பேரிடர் தொடங்கியதி லிருந்து இந்த கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருந்துகொண்டிருக்கிறது. இன்னமும் விலக்கு பெறவில்லை. இந்தியா முழுவதுமே இந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. 

சென்னை, கோவை,  மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருப வர்களுக்கு ரேண்டமாக 2 விழுக்காடு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. இப்போது துபாய்,  சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10,  15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படு கிறது. எனவே ஒமிக்ரானின் உருமாற்றமான வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  இந்தியாவில் மட்டுமல்ல,  உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனாலும் ஒரு அச்சமற்ற சூழல் இருக்கிறது. 2021 மே மாதத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்ற போது புதிய வைரஸ்கள் ஆல்பா,  பீட்டா,  டெல்டா,  டெல்டா பிளஸ் என்று ஏராள மான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இன்றைக்கு வந்தி ருக்கின்ற ஒமிக்ரான் உருமாற்றமாகியிருக்கிற வைரஸ் பெரிய அளவில் ஒரு அதி தீவிரமான சிகிச்சைக்கு போக வேண்டிய அவசியமோ  அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்கிற நிலையோ இல்லை. இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் உடனடியாக தங்களை தனி மைப்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் ஆலோ சனை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். 5  நாட்கள் இருந்தால் அவர்கள் குணமாகிவிடு வார்கள். பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் அலட்சியமாக இருக்கக்கூடாது.   நேற்றைக்கு இறந்தவர் காரைக்காலைச் சேர்ந்தவர். மற்ற இருவருக்கும் இணை நோய்கள் இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சியில் இறந்த ஒருவர் பெங்களுருவில் சிகிச்சை பெற்று வந்தவர். தீவிரமான நோய் பாதிக்கப்பட்டு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார். அவருக்கு வேறு நோய்கள் இருந்ததால் பாதிக்கப்பட்டு இறந்தார். தமிழ்நாட்டில் உள்ளவர்களில் 90 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதனால் தான் கடந்த 7  மாதங்களாக இறப்பு இல்லாத நிலை நீடிக்கிறது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.  பேட்டியின் போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி,  மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி,  பழனி  சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்,  வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன்,  திண்டுக்கல் ஆட்சியர் விசாகன், மருத்துவத்துறை இயக்குநர் சாந்திமலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (நநி)