districts

மதுரை முக்கிய செய்திகள்

காலமானார்

சிவகங்கை ஜூலை 20- தேவகோட்டையைச் சேர்ந்த வெள்ளைச்சாமி கால மானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேவகோட்டை தாலுகா செயலாளர் செல்வத்தின் தந்தை வெள்ளைச்சாமி (93) வயது முதிர்வின் காரமணாக காலமானார். அன்னா ரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி,முத்து ராமலிங்கம் பூபதி, மோகன், மணியம்மா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தி, வேணுகோபால்,பொன்னுசாமி, ஏஆர்கே மாணிக்கம், அஜீஸ்கான், புரட்சித்தம்பி, கேசவன் ஆகியோர் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ரயிலில் அடிபட்டு  வாலிபர்கள் பலி?

திருப்பரங்குன்றம், ஜூலை 20- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்ப ரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு வாலி பர்கள் பிணமாக கிடப்பதாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ளவர்கள் தகவல் அளித்தனர். அவர்கள் மதுரை ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறை யினர் முகங்கள் சிதைந்த நிலையில் கிடந்த இரு வாலி பர்களின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  முதற்கட்ட விசாரணையில் ஒருவரது கையில் மகேஸ் என பச்சை குத்தியிருப்பதும் மதுரையிலிருந்து செல்ல ரூ.60 (அறுபது) ரயில் பயணச்சீட்டு வைத்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த செல் போன் நம்பர்  ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பலியான வாலிபர்கள்  இருவரும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்ப தும் தெரியவந்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் விடுவிப்பு

விருதுநகர், ஜூலை 20- சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள ளிட்டோரை திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்தது. கடந்த 2006-2011 திமுக ஆட்சியின்போது வருமா னத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் உதவியாளர் செண்பகமூர்த்தி ஆகி யோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு, திரு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதி பதி திலகம், மூவரையும் இந்த வழக்கிலிருந்து விடுதலை  செய்தார். பத்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு  தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சாலை விபத்தில் ஒருவர் பலி

கடமலைக்குண்டு, ஜூலை 20- கண்டமனூர் அருகே நடந்து சென்றவர் வாகனம் மோதி யதில் உயிரிழந்தார். தேனி மாவட்டம் கண்டமனூரைச் சேர்ந்தவர் பால்ராஜ்  (58). இவர் புதன்கிழமை காலை வீட்டிலிருந்து கண்ட மனூர் பேருந்து நிறுத்தப் பகுதிக்கு சாலையோரம் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது வருஷநாடு கிரா மத்தைச் சேர்ந்த மாயசுதாகர் (35) ஓட்டி வந்த இரு சக்கர  வாகனம் எதிர்பாராத விதமாக பால்ராஜ் மீது மோதி யது. இதில் பால்ராஜ் உயிரிழந்தார். கண்டமனூர் காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

தற்கொலை

கடமலைக்குண்டு, ஜுலை20 - வருஷநாட்டைச் சேர்ந்த 25 வயது பெண் உடல்நல பாதிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டார். தேனி மாவட்டம் வருஷநாட்டைச் சேர்ந்தவர் ஜெயபர தன். மனைவி மோனிஷா (25). இவர்களுக்கு ஒரு வயதில்  பெண் குழந்தை உள்ளது. வயிற்றுவலியால் பாதிக்கப்  பட்டு வந்த மோனிஷா செவ்வாய்க்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வருஷநாடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நத்தத்தில் போலி மருத்துவர் கைது

நத்தம், ஜூலை 20- நத்தத்தில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மருத்து வம் பார்த்து வந்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் போலி டாக்டர்  கள் அதிகம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்  வந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஊரக நலப்  பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன் தலைமையில் உலுப்பகுடி வட்டார மருத்துவ அலுவலர் ஷேக்அப்துல்லா  மற்றும் காவல்துறையினர் நத்தம்- செட்டியார்குளத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது முத்தையா என்பவர் 10- ஆம்  வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் செய்வது  தெரியவந்தது. அவரைக் கைது செய்த நத்தம் காவல்துறை யினர் அவரிடமிருந்து ஊசி,மாத்திரை, மருந்துகளை கைப்பற்றினர். மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

நாளை விருதுநகர் மாவட்டத்திற்கு  உள்ளூர் விடுமுறை

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 22 அன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவில்லிபுத்தூரில் உள்ள அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங் களில் பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலிலின் ஆடிப் பூரத்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், வரும், ஜூலை 22-ஆம் தேதி  திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு  விருதுநகர் மாவட்டம் முழுமைக்கும் உள்ளுர் விடுமுறை யாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். 

விருதுநகரில் வேம்பு எண்ணெய் தயாரிப்பு ஆலையில் தீ

விருதுநகர், ஜூலை 20- விதுநகரில் வேம்பு எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. விருதுநகர், ஐ.சி.ஏ காலனியைச் சேர்ந்தவர் மனோகரன்(69). இவருக்குச் சொந்தமான வேம்பு எண்ணெய் தயாரிக்கும் ஆலை அல்லம்பட்டி பிரசாத் சாலையில் உள்ளது. இந்த ஆலையில் புதனன்று எண்ணெய் தயா ரிக்கும் பணி நடைபெற்றது. பணி முடிந்ததும் தொழி லாளர்கள் வழக்கம் போல இரவு ஆலையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். வியாழனன்று அதிகாலை, ஆலையின் உட்பகுதியில் இருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் மனோகரனுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர், ஆலையின் பூட்டை திறந்த போது, உள்ளே எண்ணெய் தயா ரிக்கும் இயந்திரம் உட்பட பல பொருட்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து, அவர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தார்.  இந்த விபத்தில்  சுமார் ரூ.1.50 லட்சம் மதிபிபலான பொருட்கள் தீயில்  எரிந்து சாம்பலாகியது தெரியவந்தது.

முன்னாள் வணிகவரித்துறை அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டம் இராஜ பாளையத்தில் முன்னாள் வணிகவரித் துறை அதிகாரியிடம் குறைந்த வட்டியில் பணம் தருவதாகக் கூறி நூதன முறை யில் 55 பவுன் தங்க நகைகளை மோசடி  செய்த இருவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர். இராஜபாளையம், துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (64). தமிழக அரசின் வணிக வரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரிடம் தெற்கு தேவதானத்தைச் சேர்ந்த உற வினர்களான எலிமேசன் (42)-சாந்தகுமாரி (38) ஆகியோர், தாங்கள் பி.எஸ். என்ற  பெயரில் நகை அடகுக்கடை வைத்துள்ள தாகவும், நகைகளுக்கா குறைந்த வட்டி யில் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய பாலையா, தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க  நகைகளை அடகு வைத்துள்ளார். குறிப்  பிட்ட கால இடைவெளியில் முதல் தவணை யாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளைத் திருப்பிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பாலையா, இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். விருதுநகர் குற்றவியல் நீதிமன்  றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற  உத்தரவின் பேரில் நகை மோசடியில் ஈடு பட்ட தம்பதியர் மீது வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமேஸ்வரம் கோவிலின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்திப் போராட்டம்

இராமேஸ்வரம், ஜூலை 20- இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் பாரம்பரிய உரிமையை பாது  காக்க வலியுறுத்தி  வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்தக் கோவிலின் இணை ஆணை யராக செ.மாரியப்பன் நியமிக்கப்பட்ட நாள்  முதல் தொடர்ந்து ஆகம விதிகள் மீறப்படு கின்றன. உள்ளுர் மக்கள் வழக்கமாக தரி சனம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.  திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாள் ஆகியோரை தோளில் சுமந்து செல்லும் ஊழியர்களை நீக்கும் நோக்கத்தில் ஊர்வ லத்தை டிராக்டர் மூலம் சப்பரத்தில் வைத்து  இழுத்துச் செல்லும் பணிகளை மேற் கொண்டு வருகிறார். எனக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர் போராட்டத்தில், காங்கிரஸ் சார்பில்  ராஜூவ்காந்தி, சகாயராஜ், மதிமுக சார்பில்  கரத்தே பழனிச்சாமி, வெள்ளைச்சாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் கே.கருணாகரன், ஜி.சிவா, ஜஸ்டின், சி.பி.ஐ சார்பில் எஸ்.முருகானந்தம், ரவிச்  சந்திரன், மனித நேயமக்கள் கட்சி சார்பில்  செய்யது இப்ராஹீம் ஷா, தமிழக வாழ்வு ரிமைக் கட்சி நிர்வாகி ஜெரேன்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய்க் கோட்டாச்சியர் கோபு, வட்டாட்  சியர் சி.பாலகிருஷ்ணன், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உமாதேவி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கையை அரசின் கவ னத்திற்குக் கொண்டு சென்று பத்து நாட்க ளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியயளித்தனர்.

மேலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி

தற்காலிகப் பேருந்து நிலையம் திறப்பு

மேலூர் ஜூலை 20-  மதுரை மாவட்டம் மேலூரில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கள் நடைபெற்று வருகிறது.  பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்கு மேலூர் நகராட்சி  நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற் கொண்டு வந்தது. இருப்பினும்  பணி கள் தாமதமாகின. இதையடுத்து மதுரை  மக்களைவை உறுப்பினர்  சு.வெங்கடேச னிடம்  நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் பேருந்துநிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர், மாவட்ட ஆட்சி யர், போக்குவரத்துறை அதிகாரிகள், நக ராட்சி அதிகாரிகளுடன் பேசினார். அப்போது, பேருந்து நிலையக் கட்டு மானப் பணிகள் நிறைவடையும் வரை “ புற நகர் பேருந்து நிருத்தம் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு  மதுரை மக்களவை உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம்  அருகிலிருந்து புறப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. மேலூர் பேருந்து நிலையம் எதிரில்  நிறுத்தப்பட்டு வந்த பேருந்துகள்  அழகர்  கோவில் சாலையில் உள்ள (சுந்த ரேஸ்வரர் கோவில் இடம்)  தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில்  புத்தக வெளியீட்டு விழா 

மானாமதுரை, ஜூலை 20- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்-பன்னாட்டு கிறிஸ்தவ தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.  ஞான ஆனந்தராஜ் எழுதிய வாழ்வியல் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிச்சை தலைமை வகித்தார்.  சாம்ராஜ் வரவேற்றுப் பேசினார். நூலை வெளியிட்டு மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் சிறப்பு ரையாற்றினார். தமுஎகச மாவட்டத் தலைவர் தங்கமுனி யாண்டி நூலைப் பெற்றுக் கொண்டார். கிளைத் தலைவர்  தேவதாஸ், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன், செல்வின் ஆசீர், பொறியாளர் காவேரி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

36 பவுன் நகை கொள்ளை

ஒட்டன்சத்திரம், ஜூலை 20-  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியில் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்ற நேரத்தில் நோட்ட மிட்டு மின்சார ஊழியர் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து  ரூ 15 லட்சம் மதிப்புள்ள 36 பவுன் நகை கொள்ளை யடித்துச்சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியில் கிழக்கு தெருவில் அஞ்சல் நிலையம் அருகே வசித்துவருபவர் சுந்தர்ராஜ். இவர் சின்னக்காம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 18-ஆம் தேதி குடும்பத்துடன் மயிலாடு துறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தக டேஸ்வரர் கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றச் சென்றனர். கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் (19.7.2023) நள்ளிரவு வீட்டுக்கு வந்துள்ள னர். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் அங்கு இருந்த  பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. சுந்தர்ராஜின் மகன் கவு தம் மனைவி அனிதாவிற்கு சொந்மான பிரோவில் வைக்கப்  பட்டு இருந்த ரூ 15 லட்சம் மதிப்புள்ள 36 பவுன் தங்க நகை கள் காணவில்லை. இது குறித்து இடையக்கோட்டை காவல்துறையில் சுந்தர்ராஜ் புகார் செய்தார். விசா ரணை நடைபெற்று வருகிறது.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை  முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூலை 20- நீர்ப்பிடிப்புப் பகுதியில் புதன்கிழமை பெய்த மழை கார ணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 614 கன  அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை  நீர்ப் பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் அணை யின் நீர்மட்டம் குறைந்து வந்தது. புதன்கிழமை மீண்டும்  மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் 119.75 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 49.74  அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை  மாநகர் குடிநீர் தேவைக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக  உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழையளவு: பெரியாறு 22, தேக்கடி 15.4, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ

அறுவைச் சிகிச்சைக்கு  ரூ.9 லட்சம் பெற்றுத் தந்த மாணிக்கம்தாகூர் எம்.பி

விருதுநகர், ஜூலை 20- விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் புற்று நோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தலா ரூ.3லட்சத்தை மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் பெற்றுத் தந்தார்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்த கவிதா, சித்துராஜபுரத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டை ஒன்றியம் பாலை யம்பட்டியைச் சேர்ந்த லட்சுமி ராஜாராம் ஆகியோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அரசின் உதவி கேட்டு விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இயைடுத்து, அவர், பிரதமர்  நிவாரண நிதிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மூவ ருக்கும் சேர்த்து ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.