சின்னாளப்பட்டி,ஜூன் 30- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சி யின் கூட்டம் பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமையில் நடைபெற்றது துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னாளப்பட்டி பேரூராட்சியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. குப்பை கிடங்கில் போதிய இடம் இல்லாததால் துப்புரவுப்பணியாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். குப்பைக்கிடங்குக்கு இடம் ஒதுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,சிஐடியு ஆகியவற்றின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மூன்றாவது வார்டு திமுக ஒன்றிய பிரதிநிதியான சந்திரன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை குப்பைக்கிடங்கிற்கு அளித்துள்ளார். அவ ருக்கு பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பாராட்டு, நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் பல கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசி னர். அவர்களின் கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப் படும் என்று பேரூராட்சி தலைவர் உறுதி அளித்தார். இக்கூட்டத்தில் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் ,துப்புரவு மேற்பார்வை யாளர்கள் தங்கதுரை, சரளா உட்பட துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்.