districts

மதுரை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று பெரியகுளத்தில் மருத்துவ முகாம் 

தேனி ,ஆக.18-  கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் நடை பெறும் என்று தேனி  மாவட்ட ஆட்சியர்  ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்  டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு  விழா-2023-ஐ முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவ மனையில்  ஆகஸ்ட் 19 சனிக் கிழமையன்று காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு  முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்து வச் சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை  மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவ தற்கு பதிவு செய்தல் ,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங் கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனா ளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல் ,மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் செயல்படுதல்,போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் . இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயனடையலாம்.

தேனி ஆட்சியரகத்தில்  குழந்தைகள் கவனிப்பு மையம் திறப்பு

தேனி ,ஆக.18- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் கவனிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா  தொடங்கி வைத்தார்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் என மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பராமரிப்பதற்காக  மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில்  குளிரூட்டப்பட்ட மற்றும் தொலைக்காட்சி வசதியுடன்  கூடிய குழந்தைகள் கவனிப்பு மையம் இருக்கும் .இதற்கு மாதக்கட்டணமாக ரூ.500- மட்டும் செலுத்தப்பட வேண்டும். இக்குழந்தைகள் கவனிப்பு மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6  மணி வரை செயல்படும்.  குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவு சார்ந்த குறும்படங்கள், விளையாட்டு குறும்படங்கள் ஒளிபரப்பப்படும். மேலும், கல்வி கற்பிக்கும் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களுடன், குழந்தைகளை கண்காணித்துக் கொள்ள 2 அங்கன்வாடி பணியாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சிந்து, திட்ட இயக்குநர்(குழந்தைகள் நலம்)  ராஜராஜேஸ்வரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .நல்லதம்பி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

மேலூர் அருகே இளம்பெண் கொலை 

மதுரை ஆக 18-      மதுரை மாவட்டம் மேலூர் அருகே தொந்திலிங்க புரத்தைச் சேர்ந்த சேவுகபிரியா (28).மனநிலை பாதிக்கப் பட்டவர் என்று கூறப்படுகிறது.இவர் தாய் அழகம்மாளு டன் வசித்து வந்துள்ளார்.  அழகம்மாள்  அலங்காநல்லூ ரில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் சேவுக பிரியா வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கொட்டாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சேவுகபிரியாவின் உடலை கைப்பற்றி மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,   உறவி னரான பூமராஜ் தனியாக இருந்த சேவுகபிரியாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அவர் சத்தம் போட்டதால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த  பூமராஜை கைது செய்தனர்.  

சாத்தூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

சாத்தூர், ஆக.,18- சாத்தூர் அருகே பாலத்தில் கார் மோதி  விபத்துக்குள்ளானதில்  பெண் மற்றும் அவரது இரு குழந்தைகள் என மூவர் உயிரி ழந்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த வர் ரிச்சர்ட் ராஜா   (49), இவர் கோயம்புத்தூ ரில் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மெர்லின் (44) என்ற மனைவியும் ரோஷினி (15), ரோஹித் (13) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள்  சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூருக்கு ரிச்சர்ட் ராஜா தனது சகோதரர் ஜான்சன் (56) என்பவருடன் காரில் புறப்பட்டனர்.   சாத்தூர் அருகில் உள்ள நள்ளிச் சத்திரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப் ்பாட்டை இழந்த கார், பாலத்தின் மீது மோதி  விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ரிச்சர்ட் மகன் ரோகித் (13) உயி ரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காய மடைந்தவர்களை மீட்டு  கோவில்பட்டி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கோவில்பட்டி மருத்துவமனையில் மெர்லின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட   திருநெல்வேலி அரசு மருத்துவமனையில்  ரோஷினி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரிச்சர்ட் மற்றும் ஜான்சன் ஆகி யோர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். 

 40 தொகுதியிலும்  திமுக கூட்டணி வெற்றி பெறும்  அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை, ஆக.18- சிவகங்கை மாவட்டம் அரண்மனை சிறுவயலில் கலை ஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது.  இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், எழுத்தாற்றலால், உழைப்பால் உயர்ந்தவர் கலைஞர். கல்வியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்திய துணைக்கண் டத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பெற்றுள்ளது. அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டுவோம். இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் தமிழக முதல்வருக்கு பெரும் பங்கு உண்டு. மக்களின் மகத்தான ஆதரவோடு தமிழகத்தில் 40 நாடாளுமன்ற  தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.  தமிழ்நாடு பாடநூல் நிறுவன வாரியத் தலைவர் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கை மாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து,  மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகானி செந்தில்குமார்,கல்லல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணம் அசோகன், பள்ளத்தூர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இராமநாதபுரத்தில் கருத்தரங்கம்- கலை நிகழ்ச்சி

இராமநாதபுரம்,ஆக.18- இராமநாதபுரத்தில் விடியலை நோக்கி இந்தியா கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை தாங்கினார். விவசா யத்தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.கலைய ரசன், மாவட்ட பொருளாளர் ஆர்.சேதுராமன், சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.முத்துவிஜயன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பி.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில் வாகனன் துவக்கவுரையாற்றினார்.  விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எம்.முத்துராமு ,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.கணேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார்.  முன்னதாக டாக்டர் சர்புதீன் வழங்கிய கிராமிய கலை நிகழ்ச்சியும், களஞ்சியம், ஜோதிபாசு, வாசுதேவன் ஆகியோரின் அகஸ்தியர் சிலம்பாட்ட குழுவின் சிலம்பாட்டம் சுருள்கத்திவீச்சு, தீப்பந்த விளையாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  மாவட்டத் துணைச் செயலாளர்  வி.பாஸ்கரன் நன்றி கூறினார்.