மதுரை,ஏப்.22- இயற்கை எரிவாயு குழாய் பதித்த விளைநிலங்க ளுக்கு ஒரே மாதிரியாக சம மான இழப்பீடு வழங்க வேண்டுமென மாயாண்டி பட்டி விவசாயிகள், குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர். வெள்ளியன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மாயாண்டி பட்டியை சேர்ந்த விவசாயி கள் தனித்தனி கோரிக்கை மனுக்களை வழங்கினர். கடந்த மாதத்தில் இருமுறை ஆட்சியரை சந்தித்து கோ ரிக்கை மனு கொடுத்தும் இன்னும் தீர்வு காணப்பட வில்லை என்று தங்கள் ஆதங்கத்தை விவசாயிகள் வெளிப்படுத்தினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், தங்க ளது மனுக்கள் மீது விசா ரணை நடந்து கொண்டி ருக்கிறது. பரிசீலித்து நட வடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். பத்து மடங்கு வித்தியா சம் உள்ளதை சரி செய்து ஒரே வருவாய்க் கிராமத்தில் உச்சபட்சமாக வழங்கப் பட்டுள்ள இழப்பீட்டுக் தொ கையை அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி னர். இந்த குறைதீர் கூட்டத் தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டத் தலை வர் எஸ்.பி.இளங்கோவன், விவசாயிகள் ப.முருகன், சி.கிருஷ்ணன், அ.சுந்தரம், ஜெமினிப் பாண்டி, ரா. பாண்டியம்மாள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.