districts

img

பெங்களூரை சிவப்பாக்கிய ஐடி ஊழியர்களின் மேதின பேரணி

பெங்களூரு, மே 3- சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐடி ஊழி யர்கள் நடத்திய பேரணி பெங்க ளூரை செம்மயமாக்கியது. கர்நாடகாவில் உள்ள ஐடி ஊழியர்களின் தொழிற்சங்க அமைப்பான கர்நாடக மாநில ஐடி மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் (கேஐடியு) நடத்திய மேதினப் பேரணியில் நூற்றுக்கணக்கான ஐடி ஊழியர்கள் திரண்டனர். தக வல் தொழில்நுட்ப ஊழியர்களின் உற்சாகமான அணிவகுப்பில் சிவப்புக் கொடிகள், சிவப்பு  பேனர் கள், பலூன்கள் மற்றும் பிளக்ஸ் கார்டுகள் ஏந்தி இருந்தன.மேலும் மார்க்ஸ், லெனின், ஸ்டா லின் உருவப்படங்கள் பொறிக் கப்பட்ட சிவப்பு சட்டை அணிந்து ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர். சுரண்டல் மற்றும் அரசின் தொழிலாளர் விரோத கொள்கை களுக்கு எதிராக, தொழில்நுட்ப வல்லுநர்கள் பேரணியில் பங்  கேற்று முழக்கங்களை எழுப்பி னர். முறையான ஊதியம், எட்டு மணி நேரவேலை, சங்கம் அமைக்கும் சுதந்திரம், தொழி லாளர் விரோத சட்டத் திருத்தங்  களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரி க்கை விடுத்தனர். தொழிலா ளர்கள் மீதான சுரண்டல் அதிக மாக இருக்கும் பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத்துறை யில் தொழிற்சங்கங்களின் செல் வாக்கை அதிகரிக்க மேதினப் பேரணி அழைப்பு விடுத்தது.  விப்ரோ, டெக்மஹிந்திரா உள்  ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களு டனான சட்டப்போராட்டத்தின் மூலம் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை தொழிற்சங் கத்தால் மீட்க முடிந்தது. இந்த வரலாற்று வெற்றியின் உற்சாகம் மேதின பேரணியில் தெரிந்தது. பெங்களூரு டவுன்ஹால் முன்பு காலை 10.30 மணிக்கு தொடங்கிய பேரணி 2 கிலோமீட்டர் தூரம் சென்று சுதந்திர பூங்காவில் நிறை வடைந்தது.