districts

img

சிபிஎம் சார்பில் மே தின விழா நிதியளிப்பு பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவில்லிபுத்தூர் ஒன்றிய மம்சாபுரத்தில் மேதின விழா நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கட்சி நிதியாக ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தை ஒன்றியச் செயலாளர் சசிகுமார் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜிடம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.திருமலை, சி.ஜோதிலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இருளப்பன், சந்தனம், ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.