districts

மதுரை முக்கிய செய்திகள்

இஸ்லாமிய பெண்களுக்கு  இலவச வீட்டு மனை வழங்கிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு

திண்டுக்கல், ஏப்.27- குஜிலியம்பாறை ஒன்றியத்தில் மல்லப்புரம் ஊராட்சி  சூலப்புரம் கிராமத்தில் வசிக்கும் 25 இஸ்லாமிய பெண்க ளுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக குஜிலியம்பாறை வட் டாட்சியரிடம் புதனன்று மனு கொடுக்கப்பட்டது.  இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பால சுப்ரமணி, முருகேசன், சூலப்புரம் கிளையின் உறுப்பினர்  கத்திஜா ஆகியோர் தலைமையில் 25 இஸ்லாமிய பெண் கள் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட குஜி லியம்பாறை வட்டாட்சியர் விரைவில் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.

மூணாறு வேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை  6 ஆக உயர்வு

தேனி, ஏப்.27- கேரள மாநிலம் மூணாறுக்கு திருமண விழாவில் பங்  கேற்பதற்காக  திருநெல்வேலி கே.டி.சி நகர், சண்முகா புரத்தை சேர்ந்த 21 பேர் கடந்த 22 ஆம் தேதி வேனில் வந்த னர்.  மூணாறு அருகே தொண்டிமலை என்ற இடத்தில்  செல்லும் போது, அங்குள்ள ஒரு வளைவில் கட்டுப் பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் வேனில் பயணித்த பெருமாள் (59),  வள்ளியம்மாள் (70) சுசீந்திரன் (8) சுதா(20) ஆகிய 4 பேர்  உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜானகி  (55) என்ற பெண் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி   இறந்தார். இந்த நிலையில் இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயதான சுசீலேந்திரன் என்ற சிறுவன் நேற்று சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.  இதன்மூலம் மூணாறு விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  இதே விபத்தில் ஏற்கனவே சுசீந்திரன் என்ற 8 வயதான சிறுவனும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஒட்டன்சத்திரம், ஏப்.27- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள  கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்  கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னை யகவுண்டன்வலசு, பொருளுர், கொத்தையம், பாலப்பன்  பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்  பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் சுற்றுப்புற  குக்கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, கள்ளிமந்தையம் மின்வாரிய செயற்பொறியாளர் சந்தன முத்தையா தெரிவித்துள்ளார்.

மே 1 இல்  கிராம சபை 

 தேனி, ஏப்.27- தொழிலாளர் தினத்தை  முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் 01.05.2023 அன்று  முற்பகல் 11  மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகளில்  மிகச் சிறப்பாகவும், பொது மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொள்ளும் வகையில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொது மக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து  கொண்டு, சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற 3 பேர் கைது

தேனி, ஏப்.27- தேனி மாவட்டம், கம்பம் ,க.விலக்கு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர் .கம்பத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(30). இவர் நாககன்னியம்மன் கோவில் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். அப்போது ரோந்து சென்ற கம்பம் வடக்கு காவல் துறையினர்  பரமேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த னர். இதேபோல் வாரச்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த பிரதாப் (30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா மற்றும் பைக் பறி முதல் செய்யப்பட்டது. தேனி க.விலக்கு போலீசார் முத்தனம்பட்டி பகுதி யில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற கருப்பாயி(52)  என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அலோபதி மருத்துவம் பார்த்ததால் கைது ஹோமியோபதி மருத்துவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை

தேனி, ஏப்.27- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி ஊராட்சியில் ரெங்க ராம்பட்டி  கிராமத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த  பாபு(62) என்ற ஹோமியோபதி மருத்துவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறி னார். ஹோமியோபதி மருத்துவர்  கிராம மக்க ளுக்கு மிக குறைந்த விலையில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். மேலும் அலோபதி மருத்து வமும் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹோமியோபதி டாக்டரான பாபு, ஆங்கில மருத்துவத்தின் ஊசி, மாத்திரை களை மக்களுக்கு வழங்கி வருவதாக அதே பகு தியை சேர்ந்த ரகுராம் என்பவர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்ப டையில் நேற்று முன்தினம் மாலை போலீசார் ஹோமியோபதி டாக்டரான பாபுவை போலீசார்  ஆண்டிபட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து  வந்தனர். டாக்டர் பாபு கைது செய்யப்பட்ட தக வல் ரெங்கராம்பட்டி கிராமத்தில் பரவியது. இத னையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த ஆண் கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் டாக்டர் பாபுவை விடுவிக்கக் கோரி காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.  இதுகுறித்து தகவல் கிடைத்தும் ஆண்டி பட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஹோமியோ பதி டாக்டர் அளித்த சிகிச்சையால் இதுவரை யாரும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பணம் இல்லாமல் சென்றால் கூட மருத்துவம் பார்த்து வருவதாகவும் எனவே அவரை விடு விக்க வேண்டும் என்று மக்கள் வாதாடினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் போராட் டத்தை கைவிடாத நிலையில், ஹோமியோபதி டாக்டரை போலீசார் விடுவித்தனர். ஹோமியோ பதி மருத்துவத்தை தவிர ஆங்கில மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.  மேலும் மருத்துவத்துறை இணை இயக்கு னர் பரிமளா கொடுத்த புகாரின் பேரில் ‌கொடுத்த‌ புகாரின்‌ பேரில் ஆண்டிபட்டி போலீசார் மருத்து வர் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும்  அலோபதி மருத்துவம் பார்ப்பதற்காக வைக்கப்  பட்டிருந்த மருந்து பொருட்களை போலீசார் பறி முதல் செய்தனர்.

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

சின்னாளப்பட்டி, ஏப்.27- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றி யம் அம்பாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட  மேலக்கோட்டையை சேர்ந்தவர் பாப்பம் மாள் ( 72).   இவருக்கு சாந்தி என்ற மகள்  உள்ளார். சம்பவத்தன்று சாந்தி மகன் சுரேஷ் தனது பாட்டியை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தபோது கிணற்ற டியில் செருப்பு இருந்ததை கண்டு. கிணற்  றுக்குள் பார்த்துள்ளார்.அப்போது பாப்பம்  மாள் சடலமாக கிடந்தார்  உடனடியாக சின்னாளப்பட்டி காவல் துறை, ஆத்தூர் தீயணைப்பு துறையினர் பாப்பம்மாளின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு  வைகையில் தண்ணீர் திறக்க மதகுகள் சீரமைப்பு

தேனி, ஏப்.27-  மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்  கும் நிகழ்விற்காக  வரும் 30 ஆம் தேதி வைகைஅணையில்இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக அணை யின் மதகுகளை இயக்கி சீரமைக்கும் பணி யில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் சித்தி ரைத் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. மே 8 ஆம்  தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 5 ஆம் தேதி சித்திரை முழுநிலவன்று கள்ள ழகர் வைகைஆற்றில் எழுந்தருளும் வைப வம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்காக ஒவ்வொரு ஆண்டும்  வைகைஅணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இதன்படி வைகை அணையில் இருந்து  ஏப்ரல் 30 முதல் மே 5-ம் தேதி வரை 216 மில்லி யன் கனஅடிநீரை திறந்துவிட தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதற்காக அணையில் முன்னேற்பாடு பணிகள் நேற்று நடைபெற்றது.  நீர்வளத்துறை உதவி செயற்பொறி யாளர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் மதகுகளை இயக்கி பார்த்தும்,  அணையில் உள்ள அபாய சங்கை ஒலிக்க  செய்தும் சோதனை செய்தனர். 71அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 53.97அடி நீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 107கனஅடியாகவும், குடிநீர்  திட்டங்களுக்காக 72கனஅடிநீர் வெளியேற்  றப்பட்டும் வருகிறது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி கள் கூறுகையில், மதுரை சித்திரைத்திரு விழா அழகர் ஆற்றில் இறங்கும் வைப வத்திற்காக  5 நாட்களுக்கு முன்பாகவே வைகை அணையில் இருந்து வரும் 30 ஆம்  தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. பகலில் வெயிலின்தாக்கம் அதிகம்  இருப்பதால் நீர் வெகுவாய் உறிஞ்சப்பட்டு  விடும் என்பதற்காக  மாலை 6 மணிக்கு தண்ணீ்ர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்த டுத்த நாட்களில் படிப்படியாக குறைக்கப் படும். மொத்தம் 216மில்லியன் கனஅடிநீர் திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மதுரை மீனாம்பாள்புரத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி  தற்கொலை

சிபிஎம்-பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார்

மதுரை, ஏப்.27- மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கே. சிவப்பிர காசம் (35) ,இவரது மனைவி பிரேமலதா (26). சிவப்பிரகாசம் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக வாழை இலை வியாபாரம்  செய்து வந்தார்.  இவர் தொழில் நிமித்த மாக மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர்  பகுதியில் தன்னுடைய வீட்டின் அருகில்  வசிக்கும் இந்திரா, சாந்தி, தங்கம்மாள் ஆகிய மூன்று நபர்களிடம் ரூ. 3 லட்சம் வரை  கந்து வட்டி மூலம் கடனாக பெற்றுள்ளார். இதில் இந்திரா என்பவரிடம் ஆறு மாதங்க ளுக்கு முன்பு ரூ 70 ஆயிரம் பெற்ற நிலை யில் அதற்கு கடந்த ஆறு மாதங்களாக வட்டி யாக மாதம் 24 ஆயிரம் கொடுத்து வந்துள் ளார். கடந்த ஒரு மாதமாக சிவபிரகாசம் வட்டி கொடுக்க முடியாத சூழ்நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை  இந்திரா மற்றும் தங்கம்மாள் இருவரும் தனக்கு அசலும் வட்டியும் கொடுக்க வேண்டும்  என்று தகாத முறையில் பேசியுள்ளார். இதில் மனமுடைந்த சிவப்பிரகாசம், பிரேம லதா ஆகிய இருவரும் 25ஆம் தேதி காலை யில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செல்லூர் காவல்  நிலையத்திற்கு புகார் தெரிவித்து அவர்கள்  உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு  அனுப்பி வைத்தனர்.  புதன்கிழமையன்று உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் சிவப்பிரகாசம் பிரேமலதா உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து சிவப்பிரகாசின் சகோதரர் கே. பிரகாஷ் கூறுகையில், இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக் கூடாது.  

இறந்த எனது சகோதரர் சிவப்பிரகாசிற்கு தர்ஷன் என்ற 5 வயது மகன் ,அபிநயா என்ற  3 வயது குழந்தையும் உள்ளது இன்றைக்கு இந்த இரண்டு குழந்தைகளும் கந்து வட்டி கொடுமையால் பெற்றோர்களை இழந்து வாடுகின்றது. வாங்கிய பணத்துக்கு மேல் வட்டி கட்டியுள்ளார் . மனிதாபிமானம் கூட இல்லாமல் வட்டியும் அசலையும் கேட்டு தற்கொலைக்கு துண்டிய இந்திரா மற்றும் தங்கம்மாள் உள்ளிட்ட  மூன்று பேர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி தண்டனையை அவர் களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.  கந்து வட்டி  கொடுமையினை ஒழிக்க உரிய  நடவடிக்கையினை அரசும் காவல் துறை  நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். பெற் றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உரிய சமூக பாதுகாப்பினை அரசு வழங் கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.   மீனாம்பாள்புரம் பகுதியில் கந்து வட்டிக் கொடுமை அதிகரித்துள்ளது .அவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்குசட்டப்படி கடுமை யான தண்டனை  வழங்கிட வேண்டும். பெற்றோரை இழந்த   இரண்டு குழந்தை களுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்கி  பாதுகாத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு - 2 பகுதிக்  குழு  செயலாளர் ஏ. பாலு வலியுறுத்தி னார்.  மேலும் இந்த தற்கொலை குறித்து  உரிய நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க  வேண்டும் என்று பொதுமக்கள் மற்  றும் சிவபிரகாஷ் - பிரேமலதா குடும்பத்தின் சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்று கூறினார்.

இடி தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: பெண் தொழிலாளி பலி

விருதுநகர், ஏப்.27- விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில்  திடீரென இடிதாக்கியதில் பெண் தொழி லாளி உயிரிழந்தார். விருதுநகர் அருகே உள்ளது வி. ராம லிங்காபுரம். இங்கு,  சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது.  நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிவரும்  இந்த பட்டாசு  ஆலையில் சுமார். 58 அறைகள் உள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் தொழிலாளார்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த னர். இதனையடுத்து,   முழுவதுமாக  தயா ரிக்கப்பட்ட பட்டாசுகளை எடுத்து  தனி அறை யில்  சேர்த்து வைக்கும் பணியில் தொழிலா ளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது,  எதிர்பாராதவிதமாக பட்டாசுகளை வைக்கும் அறையில் திடீ ரென இடி விழுந்தது. இதில் வில்லூரை சேர்ந்த புஷ்பம் (55) என்ற பெண் தொழி லாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வச்சக்கா ரப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.