districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் - புறநகர் மாநகராட்சி பகுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் - புறநகர் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டம் மற்றும் வீட்டுமனை கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இளங்கோ பள்ளி முன்பிருந்து பேரணியாக வந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர். பின்னர், ஆட்சியரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, துணை மேயர் தி.நாகராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.