districts

img

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்

மதுரை, ஆக. 16- கையால் மலம் அள்ளும் தொழி லாளர்களைக் கண்டறிந்து அவர் களின் மறுவாழ்வுக்கான அடையாள  அட்டையை வழங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறி ஞர் சகாய பிலோமின் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம், கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல்  செய்ய உத்தரவிட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

 கைகளால் மலம் அள்ளுவோர் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013-இன்படி கை களால் மலம் அள்ளுவது 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதியுடன்  தடை செய்யப்பட்டுவிட்டது.  இந்த நாளிலிருந்து, எந்தவொரு தனிநபரும், முகமையும், கை களால் மலம் அள்ள எவரையும் ஈடு படுத்தவோ, பணியமர்த்தவோ முடி யாது.

சட்டத்தை மீறுபவர்கள் மீது  இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை  அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு சட்டமியற்றி உள்ளது. இத்தகவலை 2022-ஆம்  ஆண்டு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தான் தெரிவித்திருந்தார்.