அருமனை, ஆக.18- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மேற்புறம் ஊராட்சி ஒன்றியம் மஞ்சாலு மூடு ஊராட்சிக்குஉட்பட்ட புதுக்குளத்தில் அமிர்தகுளம் தூர் வாரும் பணிக்காக ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நடைபெற்றது. புது குளத்தில் பஞ்சாயத்து பிரதிநிதி ஹரிகுமாரன்நாயர் முன்னிலையில் முதுபெரும் முன்னாள் வார்டு உறுப்பினர் திவாகரன் நாயர் தேசியக்கொடி ஏற்றினார். இதை போன்று காரோடு கோட்டயத்து குளத்தில் அமிர்தகுளம் தூர் வாரும் பணிக்காக ரூ.9. 90 லட்சம் மதிப்பீட்டில் வேலை நடைபெற்றது. பஞ்சாயத்து பிரதிநிதி ராஜன் முன்னி லையில் முதுபெரும் முன்னாள் துணைத் தலைவர் முத்தையன் தேசியக்கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மஞ்சாலுமூடு ஊராட்சி தலைவர் தீபா செல்வன் தலைமை தாங்கினார்.
வேர் கிளம்பி
கன்னியாகுமரி மாவட்டம் வேர் கிளம்பி பேரூராட்சியில் சுதந்திர தின கொடியை பேரூராட்சி தலைவர் சுஜீர்ஜெப சிங் குமார் ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
அருமனை
அருமனை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் லெதிகாமேரி சுதந்திர தின கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலை வர் சுலோஜனா, வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.