திருவில்லிபுத்தூர்,ஆக.8- ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநி லங்களில் கலவரத்தை கட்டுப்படுத்த தவ றிய பாஜக அரசுகளைக் கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரு வில்லிபுத்தூர், ராஜபாளையம் சத்திரப் பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் நகரச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருமலை, ஜெயக்குமார் ,ஜோதி லட்சுமி, ஒன்றிய செயலாளர் சசிகுமார், வத்ராப் ஒன்றிய செயலாளர் பெனரி ஆகியோர் பேசினர். இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் கே.அர்ஜுணன் கண்டன உரையாற்றி னார். இராஜபாளையம் நகரில் நகரச் செய லாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண் ணன் கண்டன உரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி. மாவட்டக் குழு உறுப்பினர் ராமர் ,ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், மூத்த தோழர் கணேசன் ஆகியோர் பேசி னர்.