districts

img

சிவகங்கை கண்டுபட்டியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை, ஜன.19- சிவகங்கை மாவட்டம்,கண்டுப் பட்டியில் உள்ள பழைய அந்தோணியார் கோவிலில் மத நல்லிணக்கத்தை பேணும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.  இந்த திருவிழாவிற்கு வரும் அனை வரையும் ஒவ்வொரு வீட்டு வாசலில் நின்று  உணவருந்த அழைத்து, அனைத்து வீடு களிலும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. பின்னர் அக்கிராமத்தில் உள்ள திறந்த வெளியில்  500 க்கும் மேற்பட்ட கட்டுமாடு கள் அவிழ்த்துவிடப்பட்டன.  பின்னர் கிரா மத்தினர் சார்பில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு  போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்டஆட்சி யர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் கொடிய சைத்து துவக்கிவைத்தனர். இதில் 108 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் திருப்புவணம் பகுதி யை சேர்ந்த எஸ்.ஐ கருப்பையா, ஆயு தப்படை காவலர் மணிகண்டன் உள்ளிட்ட  100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த னர். பலத்த காயமடைந்த 33 பேர் சிவ கங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.