districts

பருவகால பணியாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்

சென்னை, அக்.26- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழி லாளர் சங்கம் (சிஐடியு ) சார்பாக  நிர்வாக இயக்குநரை புதன் கிழமை சங்கத்தின் மாநில தலை வரும் சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளருமான வீ.குமார் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  ஆர். புவனே ஸ்வரன், மாநில துணைச் செயலா ளர்  எஸ்.சண்முகம், மாநிலச் செய லாளர்  எம். ராஜாங்கம் ஆகி யோர் சந்தித்து பல்வேறு கோரிக் கைகள் தொடர்பாக கடிதம் அளித்து பேசினர். கோரிக்கைகள்  2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவ கால பணியாளர்களை உடன் பணி நிரந்தரம் செய்ய உத்தரவு பிறப் பிக்கவேண்டும் என கோரப் பட்டது. இதற்கு பதில் அளித்த நிர்வாக இயக்குநர், பணி நிரந்தரம்  தொடர்பாக அனைத்து மண்ட லங்களிலும் விபரங்கள் பெறப் பட்டு எதிர்வரும் குழும கூட்டத் தில் ஒப்புதல் பெற்று விரைவாக பணி நிரந்தர ஆணை பிறப்பிக்கப் படும் என்றார். கடந்த காலங்களைப் போல பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர் களுக்கு 20விழுக்காடு போனஸ் வழங்க ஏதுவாக அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்  கூறினார். திருச்சி மண்டலத்தில் இண்டேன் எரிவாயு பிரிவில் பணியாற்றக் கூடிய சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு கூலி  உயர்வு வழங்குவது குறித்து  விரைவாக வாணிப பிரிவில் விளக்கம் பெற்று இந்தியன் ஆயில் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக இயக்குநர் பதில் அளித்தார்.

சுமைப்பணி தொழிலாளர் களுக்கு விரைவில் கூலி உயர்வு வழங்க ஆவண செய்வதாகவும் துப்புரவு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார், கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் செய்த  நெல் மூட்டைகளை காலதாமத மாக இயக்கம் செய்வதால் ஏற் படும் எடை குறைவிற்கு உண்டான  தொகையினை வசூல்  செய்யும் போது  தலைமை அலுவலக சுற்றறிக்கையினை பின்பற்றி  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிஐடியு நிர்வாகிகள் வலியுறுத்தி னர். இதற்கு பதிலளித்த நிர்வாக  இயக்குநர் அனைத்து மண்டலங் களிலும் துரிதமாக பணிகள் நடை பெற நடவடிக்கை எடுப்பதாகவும் எடை குறைவிற்கான  இழப்பு தொகை பருவ கால பணியாளர் களால்  செலுத்த நேரிடாத வண் ணம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார். இந்த கோரிக்கைகள் தவிர பல்வேறு மண்டலங்களில் தொழி லாளர்கள் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் தொடர் பாகவும் நேரடியாக விளக்கி கூறப்பட்டது.  தொடர்புடைய மண்டலங்கள் மீது விசாரணை மேற்கொண்டு  புகார்கள் இனி வரும் காலங்களில் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுப்ப தாக நிர்வாக இயக்குநர்  உறு தியளித்துள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். புவனேஸ்வரன் ஒரு அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.