மதுரை, ஏப்.25- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கிட வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 25 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு சங்க மாவட்ட தலைவர் சுப்பி ரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் என்.பழனிச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் என். முத்து அமுதநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விலக்கி பேசினர். மாநிலக்குழு உறுப்பினர்கள் பால கிருஷ்ணன், ஜெயக்குமார், எம். ராமசாமி, ஏ. பாஸ்கரன் மாவட்ட செயலாளர் சவுரி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழனியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வி. இராஜ மாணிக்கம், எஸ்.பால்சாமி மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். விருதுநகர் விருதுநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.கார்க்கிச் செல்வன் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து மாவட்ட செயலா ளர் டி.சத்தியராஜ் பேசினார். போராட்டத்தை ஆதரித்து தமுஎகச செயலாளர் ராஜகோபால் பேசி னார். முடிவில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சுப்புராம் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், முத்துமாரி, தினகரன், சுந்தர் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.