விருதுநகர், மார்ச் 14- விருதுநகரில் எம்.ஆர்.வி நினைவகத்தில் கூட்டுறவு தேர்தல் தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜய முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. குருசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.அசாகன் துவக்கி வைத்தார. சிபிஎம் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன் விளக்கிப் பேசினார். முடிவில் சிஐடியு கூட்டுறவு சங்க மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது: கூட்டுறவு இயக்கமானது நாட்டு மக்களின் அன்றாட வாழ் வில் ஒரு அங்கமாக விளங்குவது டன் நாட்டு மக்களின் நலனுக்காக குறிப்பாக நலிவுற்ற பிரிவினரின் நல்வாழ்வுக்காக முக்கிய பங் காற்றி வரும் அமைப்பாகும். கூட்டுறவு அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரக்கூடிய அமைப்பா கும். கூட்டாட்சி தத்துவத்தை பல வீனப்படுத்த வேண்டும் என்ப தற்காகவே தற்போது உள்ள ஒன் றிய அரசு கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி அதற் கான அமைச்சராக அமித்ஷா நிய மிக்கப்பட்டுள்ளார்.
நிதி ஆதாரத்தை சுரண்ட
மாநிலங்களில் வலுவாக உள்ள கூட்டுறவு அமைப்புகளின் நிதி ஆதாரத்தை சுரண்டுவதற்காக புறவாசல் வழியில் பல மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தில் திருத்தத்தை தற்போது ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திருத்தத்தில் எந்தவொரு கூட்டுறவு சங்கமும் அந்த சங் கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்கள் குறையாது ஆஜராகி பல மாநில கூட்டுறவு சங்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்வ தாக தீர்மானம் கொண்டு வந்து வாக்களித்து நிறைவேற்றினால் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். அதேபோன்று திருத்தப்பட்ட பிரிவின் படி கூட்டுறவு சங்கங்களு டைய பங்குகள் எதையும் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் திரும்பப்பெற முடியாது.
சீர்குலைப்பு
மேலும் கூட்டுறவு சங்கங்களுக் கான தனி மத்திய தேர்தல் ஆணை யம் நியமிப்பதற்கும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களையும் தனி வரம்பிற்குள் தணிக்கை துறையை பயன்படுத்தி தணிக்கை செய்ய வும், புகார் நிவர்த்தி பிரிவை உரு வாக்கி அதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கும், கூட்டுறவு குறை தீர்ப்பாளரை நியமனம் செய்யவும் தற்போது திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இது மாநிலங்களில் சுயேட்சை யாக செயல்படக்கூடிய கூட்டுறவு சங்கங்களை சீர்குலைப்பதற்கு உதவி செய்யக் கூடிய வகையில் இத்திருத்தங்கள் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பால்வளம், மீன்வளம் ஆகியவை யும் இணைத்து கூட்டுறவு சங்கங் களை அமைக்க ஒன்றிய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக ரூ.4800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 63 ஆயிரம் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங் களை கணினிமயமாக்குவதற்காக ரூ.2516 கோடி மதிப்பிடப்பட்டு ஒன் றிய அரசு ரூ. 1528 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிதியினை மடைமாற்றம் செய்யவே உதவி யாக அமையும்.
சீர்குலைக்கப்படும் பொதுவிநியோகம்
பசியால் வாடுவோர் எண் ணிக்கை அதிகரித்து வரும் வேளை யில் பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய நிதியமைச்சர் உணவுக்கான மானி யத்தை வெகுவாக குறைத்திருப் பது பொது விநியோகத் திட் டத்தை மேலும் பலவீனப்படுத்தும். மேலும் நியாயவிலைக் கடைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் டீலர்களிடம் வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தை பாது காக்க மாநில அரசு உறுதியான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 23,149 கூட்டுறவு சங்கங்க ளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள் ளது. 2013 மற்றும் 2018 இல் நடை பெற்ற தேர்தல் அராஜகங்களை அளவிடமுடியாது. எனவே எதிர் வரும் கூட்டுறவு தேர்தல் ஜனநாய கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவுசங் கங்களில் உறுப்பினர் சேர்ப்பதற்கு உரிய கால அவகாசம் அளிப்பது, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல்\ நீக்கல் என்பதற்கான கால அவ காசம் அளிப்பது, வாக்காளர் களுக்கு நிழற்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்குவது, வாக்காளர் தகுதிகள்/ வேட்பாளர் தகுதிகள் அனைவரும் அறியும் வகையில் அறிவிப்பு செய்வது, வாக்களிக்க போதுமான பாது காப்பு அளிப்பது ,தேர்தல் ஆணை யம் சுயேட்சையாகவும், சுதந்திர மாகவும் செயல்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவைகளை அரசு உறுதி செய்திட வேண்டும். வேட்புமனுதாக்கல், வேட்புமனு பரிசீலனை, வாக்குபதிவு, வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் அறிவிப்பு என அனைத்திலும் விதிமுறை களை முறையாக பின்பற்றி கூட்டு றவு தேர்தலை நடத்திட வேண்டும். ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை புறந்தள்ளி கூட்டுறவு அமைப்பு களை பாதுகாப்பது இன்றைய தேவை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.