districts

திருமங்கலத்தின் நெருக்கடி தீர தேவை போர்க்கால நடவடிக்கை

மதுரை, டிச.27- மதுரை திருமங்கலம் தேவர் சிலையிலி ருந்து விமானம் நிலையம் செல்லும் வழி யில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் விரை வில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்’ என, டி.ஆர்.இ.யூ. வலியுறுத்தி யுள்ளது. டிஆர்இயு மதுரைக் கோட்ட இணை  செயலாளர் சங்கரநாராயணன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: திருமங்கலம் ‘டிராபிக் கேட்’ வழியாக நாள் ஒன்றுக்கு 60 ரயில்கள் கடக்கின்றன. மதுரை விமான நிலையத்திற்கு ஏராளமான வாகனங்கள் இதன்வழியாகச் செல்கின்றன. தேனி, உசி லம்பட்டி, விருதுநகர், சிவகாசி பகுதிகளில் இருந்து வருவோர் விமான நிலையத்திற்கு இவ்வழியாக செல்லலாம் என்பதே இதற்கு காரணம். இதன் கிழக்கு பகுதியில் 50 ஆயி ரம் குடும்பங்கள் வசிக்கின்றன. திருமங்க லத்தின் கிழக்கு பக்கத்தில் வசிப்பவர் களுக்கு இந்தச் சாலை தான் பிரதானமா னது. மதுரை-விருதுநகர் இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் இந்த  ‘கேட்’ பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் செல்லும் நேரங்களில் ரயில் போக்கு வரத்திற்காக அதிக நேரம் பூட்டப்படுகின் றன. இதனால் மக்கள் பெரும் அவ திக்குள்ளாகின்றனர். மக்கள் நலன்கருதி ரயில்வே, நெடுஞ்சாலை துறையும் இணைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றார்.