districts

img

எப்படியிருந்த நான் ஏன் இப்படியானேன்?

மதுரை, ஜன.23- ஒரு காலத்தில் மதுரை காந்தி மியூசியத்திற்கு அருகிலுள்ள இராஜாஜி பூங்கா சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பொழுது போக்குமிடமாக இருந் தது. ஆனால் இன்றைக்குப் பரா மரிப்பின்றி மட்டுமல்ல கேட்பா ரின்றியும் உள்ளது. மதுரை நக ரில் வசிப்பவர்களுக்கு உள்ள ஒரு பொழுதுபோக்கு மையங்களில் இதுவும் ஒன்று. பூங்கா காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்குச் சராசரியாக 500 பேர் வந்துசெல்கின்றனர். வார இறுதி நாட்களில் சுமார் 2,000 பேர்  வருகின்றனர். அடர்ந்த மரங்களால் சூழப் பட்டுள்ள இந்தப் பொழுதுபோக்கு மையம் எப்படியிருந்த நான் இப்ப டியானேன் என்ற நிலையில் உள் ளது. நுழைவுக் கட்டணம் ரூ.20 வசூலிக்கப்படுகிறது. ஆனால், எதுவும் உருப்படியாக இல்லை. மதுரை புதுச்சிறைச்சாலை பகுதியில் வசிக்கும் எம்.சிவ ஹாசினி கூறுகையில், கூடுதலாக ஊஞ்சல்கள் அமைக்க வேண்டும். தற்போதுள்ள விளையாட்டு தள வாட பொருட்கள் மோசமாக உள் ளது. பூங்காவின் கட்டமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றார்.

பூங்காவிற்கு மாணவர்களை அழைத்து வந்த ஒரு பள்ளியின் ஆசிரியர் கூறுகையில். விளை யாட்டு முக்கியமானது. நகரத்தில் வசிப்பவர்களுக்கு இராஜாஜி பூங்காவைத் தவிர வேறில்லை. பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் சலுகையளிக்க வேண்டுமென்றார். தனது இரு மகன்களுடன் பூங்  காவிற்கு வந்திருந்த பாண்டிக்  கோவிலைச் சேர்ந்த ஏ.மணி மேகலை கூறுகையில், பூங்காவின்  அழகியல் குறைந்து வருகிறது. மதுரை நகரின் மையப்பகுதியில் இது போன்ற பூங்காவை இருப்  பது சந்தோஷம் தான். மரங்களின் கிளைகளை வெட்டி சீரமைக்க வேண்டும். புதியதாகச் செடிகளை நட வேண்டும். அமரும் இருக்கை களைச் சீரமைக்க வேண்டும். கழிப்  பறைகளைச் சுத்தப்படுத்த வேண் டும். பூங்காவைச் சுற்றியுள்ள சுவர்களை வெள்ளையடித்துப் புதுப்பிக்க வேண்டும் என்றார்.

மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த ஜே. அங்கயற்கண்ணி, கூறு கையில், ஒரு சில இளை ஞர்கள், “குறிப்பாகக் கல்லூ ரிக்குச் செல்பவர்கள்” பார்வையா ளர்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்கிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளை அவர்கள் கைவிட வேண்டும். பூங்கா குழந்தைகளுக்கானது என்  பதை அவர்கள் உணர வேண்டு மென்றார். குடிநீர் குழாய்களிலிருந்து தண்ணீர் கசிந்து வெளியேறு கிறது. நீரூற்றுப் பயன்பாட்டில் உள்ளதா...? என்ற கேள்வியையும் எழுப்பினர் பூங்காவிற்கு வந்தி ருந்தவர்கள். சிறுவர்கள் விரும்பி விளை யாடும் ராட்சத ராட்டினத்தின் அருகே ஒரு பெரிய அளவிலான குப்பை குவிந்து கிடந்தது. பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் உடைந்துள்ளது. பூ தொட்டிகளும் முறையாகப் பராமரிக்கவில்லை. பூ தொட்டிகள் குப்பைத் தொட்டி களாக மாறிவருகிறது. மயில் உள்  ளிட்ட சில சிலைகள் சிதிலமடைந் துள்ளது. நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி களை மாணவர்கள் எச்சரிக்கை யுடன் கடக்க வேண்டியுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன் தனியார் ஒப்பந்த தாரருக்கு இந்தப் பூங்கா குத்த கைக்கு விடப்பட்டது. பூங்கா வைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.  '

தி இந்து இணையதள தகவல்களிலிருந்து