வியாழனன்று நள்ளிரவில் பெய்த கனமழையால் மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பாக மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரானது கட்டப்பட்டு வரும் வணிகவளாகத்திற்குள் செல்வதால் அதனை வெளியேற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர் . உரிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் பெரிய அளவிலான துணியைக் கொண்டு தண்ணீரை இழுத்து வெளியேற்றிய அவலம்.