districts

img

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் மே தினக் கொண்டாட்டம்

மதுரை, மே 1-  மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியா ளர்கள் சங்கத்தின் ஏழாம் ஆண்டு மே தின விழா மற்  றும் மே தினத்தன்று நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்கள், போட்டி யில் கலந்து கொண்ட அவர் களது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. மதுரை மடீட்சியா அரங்  கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொறியியல் பிரிவு பணியா ளர் சங்கத் தலைவர் சி எம். மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் கே.  கண்ணன், அவைத் தலைவர்  இ.நல்லதம்பி, துணைத் தலைவர் ஏ. துரைராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். பொருளாளர் கே. டி. துரைக்கண்ணன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்தி ராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் டி.  நாகராஜன், தலைமை செய லக சங்க தலைவர் -ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளர் கு. வெங்கடே சன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலா ளர் க. நீதி ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ், சிஐடியு மாநக ராட்சி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.  பாலசுப்பிரமணியம் வரு வாய்த்துறை உதவியாளர் சங்க தலைவர் எம். முகுந் தன், பொருளாளர் கே. ஆறு முகம் ஆகியோர் வாழ்த் திப்பேசி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.