districts

img

மதுரை காமராசர் பல்கலை. பணியாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

மதுரை, செப்.21- மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொகுப்பூதிய பணி யாளர்கள் 136 பேர் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  பணி  நீக்கம் செய்யப்பட்ட 136  தொகுப்பூதிய பணியாளர் கள்  அனைவரும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடு பட்டு வந்தனர்.  செப்டம்பர் 20 முதல் பல்  கலைக்கழக நுழைவு  வாயில் முன்பாக  கொளுத் தும் வெயிலில் நிழற்குடை இல்லாமல் தொடர் 72 மணி  நேரம் உண்ணாவிரத போராட் டத்தை துவக்கினர்.  இந்நிலையில் புதனன்று  மதியம் பேச்சு வார்த்தை  நடைபெற்றது. அந்த  முதல் கட்ட பேச்சுவார்த்தையில் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பல்கலைக் கழக பதிவாளர், மதுரை காம ராசர் பல்கலைக்கழக தொகுப்  பூதிய மற்றும் தற்கால பணி யாளர் சங்கத்தின் தலைவர் வீரபாண்டி, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் நீதி  ராஜா உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். அதில் பல்க லைக்கழத்திற்கு   போதிய நிதி இல்லாத காரணத்தால் இவர்களை பணி நீக்கம் செய்துள்ளோம்.  மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு தமி ழக அரசிடம் இருந்து பல்க லைக்கழகத்திற்கு போதிய நிதி வழங்கப்பட்டால் இவர்  களை சேர்த்துக் கொள்கி றோம்.  அதுவரை இவர்களை சேர்க்க தற்சமயம் முடியாது. உங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடு மாறு கேட்டுக்கொள்கிறேன் என்றனர். அதற்கு போராட்டக் காரர்கள், பணியில் அமர்த் தும் வரை போராட்டம் தொட ரும் என்று  உறுதியாக தெரி வித்தனர்.  புதனன்று  இர வும் தொடர்ச்சியாக போராட்  டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.