மதுரை,ஏப்.18- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் ஏப்ரல் 18 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா தலைமையில், நாடாளுமன்ற பொ துத்தேர்தல் 2024 வாக்குப்பதிவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது: மதுரை மாவட்டத்தில நாடாளுமன்ற பொ துத்தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற் பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட் டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர் என 6 தொகுதிகள் அடங்கும். அதே போல, தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள், விருதுநகர் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்டு திருப்பரங்குன்றம், திரு மங்கலம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும்.
தேர்தல் வாக்குப்பதிவிற்காக 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,751 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் 1,573 வாக்குச்சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் 356 இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்ட றியப்பட்டுள்ளன. பதற்றமான மையங்கள் வெப் காஸ்டிங் முறையிலும், தேர்தல் நுண்பார்வை யாளர்கள் நியமித்தல் மூலமாகவும் கண்கா ணிக்கப்படவுள்ளன. மாவட்டத்தில் 1,788 வாக்குச்சாவடி மையங்கள் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்பட உள்ளன. 428 அலுவலர்கள் தேர்தல் நுண்பார்வையா ளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக உதவியா ளர்களுடன் சக்கர நாற்காலிகள் வைக் கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரையின்படி, 10 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்க ளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் கூடுதல் என்ற அடிப்படையில் மொத்தம் 3,303 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் (Ballot Unit), 3,303 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,574 வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT) தேர்தல் வாக்குப்பதிவிற்காக தயார் நிலையில் உள்ளன.
10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 13,200 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 5,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதே போல, வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வருவதற்காக 459 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற் பாடு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்குப்பதிவு செய்திட வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.