districts

img

தமிழகத்தின் இரண்டாவது பெரிய ரத்த வங்கி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் இயங்குகிறது

மதுரை, ஜூலை 23- தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய ரத்த வங்கி மதுரை அரசு  இராஜாஜி மருத்துவமனை யில்தான் இயங்கிக்கொண்டிருக்கி றது என்று மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியுள்ளார். மதுரையில் குருதிக்கொடை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதனை தமிழக மருத்துவம் -மக்கள் நல்  வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், வணிகவரி -பதிவுத்தறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களை வழங்கினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: மதுரை அரசு இராஜாஜி மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் இயற்கை எரிவாயு நிலையம் ரூ.50  லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப் பட்டு தற்போது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்  றுச்சூழலை பாதுகாக்கும் வகை யில் இயற்கை எரிவாயு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. குருதிக்கொடையின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 4,500  மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி மது ரையில் நடைபெற்றது. குரு திக்கொடையின் அவசியத்தை வலி யுறுத்தி நான் இதுவரை 70 முறைக்கு மேல் இரத்ததானம் செய்திருக்கி றேன்.  

தமிழக அரசின் சார்பில் 107 ரத்த  வங்கிகளும், தனியார் சார்பில் 2,228 ரத்த வங்கிகளும் உள்ளன. குரு திக்கொடை வழங்குவதில் தமி ழகம் இரண்டாம் இடத்திற்கு வந் துள்ளது. மீண்டும் குருதிகொடை வழங்குவதில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வர வேண்டும் என்ற  வகையில் ரத்ததான முகாம்கள் நடத்துவதோடு, அரசு மருத்துவ மனைகளில் இரத்த வங்கிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  மதுரை அரசு இராஜாஜி மருத்து வமனையில் ரேடியா அலைவரிசை அடையாள சாதனம் ஒன்று இயக்கி  வைக்கப்பட்டுள்ளது. இந்த சாத னத்தின் மூலம் இரத்த பையின் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.  தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய ரத்த வங்கி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை யில்தான் இயங்கிக்கொண்டிருக்கி றது. மதுரை அரசு மருத்துவ மனை இரத்ததானம் பெறுவதோடு  மட்டுமல்லாது, இரத்தத்தின் கூறு களை கண்டறிவதிலும், இரத்தத் தின் பயன்பாட்டை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுவதிலும் முதலிடத்தில் இருக்கிறது.  இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி யர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், அரசு இராசாசி மருத்து வக்கல்லூரி முதன்மையர் ஆ. ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.