மதுரை, ஏப்.10- கொரோனா அதிகமானால் அதை எதிர்கொள்ள தயா ராக இருப்பதாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதன்மையர் ரத்னவேல் தெரிவித்தார், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் உரு வாக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை முதன்மையர் ரத்னவேல் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதரைப் போன்ற பொம்மை ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு உடனடி யாக முதல் கட்டமாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது தொடர்ந்து கண்காணிப்புக் கருவி மூலம் சுவாசம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளவது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முகக்கவசம் ஆகியவற்றின் இருப்பு நிலவரம், சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சி ஜன் வெண்டிலேட்டர் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்ட ருன் கூடிய ஸ்டெட்ரெச்சர்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டனர் முதன்மையர். செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அரசு மருத்துவ மனை முதன்மையர் ரத்னவேல், மதுரை அரசு மருத்துவ மனையில் 1,500 படுக்கை வசதிகள் உள்ளன. தோப்பூரில் அதிகளவில் படுக்கை வசதிகள் உள்ளன. ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை யான அளவு கையிருப்பு உள்ளது. தற்போது ஒருவர் மட் டுமே கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றார்.