districts

img

விரைந்து சீரமைக்குமா மாநகராட்சி?

மதுரை, ஜூன் 6- மதுரை மாநகராட்சி பகுதி களில் கிருதுமால் நதிவாய்க்கால், சுடுதண்ணீர் வாய்க்கால், சிந்தா மணி வாய்க்கால், அவனியாபுரம் வாய்க்கால், பனையூர் கால்வாய், அனுப்பானடி கால்வாய், கோரைக்  கால் வாய்க்கால் ஆகியவை உள்  ளன. இவைகள், வைகை ஆற்றுத் தண்ணீர் மதுரை மாநகர் மற்றும்  புறநகர் பகுதிகளில் உள்ள கண் மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட  நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு  செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. பல ஆண்டுகளாக விவசாயத் திற்கு பயன்படுத்தப்பட்ட நீர்  வரத்து கால்வாய்கள் இன்றைக்கு  பயன்பாடற்ற நிலையில் பொதுப்  பணித்துறை மற்றும் மாநகராட்சி யின் அலட்சியத்தால் குப்பைகள் குவிந்து, கழிவு நீர் செல்லும் வாய்க் காலாக மாறியுள்ளது. குறிப்பாக  பெத்தானியபுரம் பகுதியில் இருந்து செல்லும் அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி வாய்க்கால் பல ஆண்டுகளாக சுத்தம் செய்  யப்படாமல் குப்பைகள் தேங்கிக்  கிடக்கும் இடமாகவும் அதில் உள்ள  குப்பைகளை அகற்ற முடியாத அள விற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்  தும் காணப்படுகிறது. பல ஆண்டு களுக்கு முன்பு இந்த வாய்க்கால் கரையோர பகுதிகளில் குடியிருப்பு கள் அதிகம் இருந்ததால் ஆக்கிர மிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. அதற்குப்பின் வாய்க் கால்களை சீரமைக்கும் பணியினை செய்து அதில் கான்கிரீட் தடுப்பு கள் அமைக்கப்பட்டது. இதற்கு  பின் அப்பகுதியில் உள்ள மக்கள்  வாய்க்காலில் அகலத்தை மாநக ராட்சியும் பொதுப்பணித்துறை நிர்  வாகம் சீரமைத்து விட்டது நீ இதற்கு மேல் ஆக்கிரமிப்பு இல்லை என்று அவரவர் வீடுகளை கட்டி விட்டார்  கள். இப்போது மக்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இக்கால்  வாய்கள் கழிவுநீர் செல்லும் கால்  வாய்களாக மாறி உள்ளது, 10  ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி யில் உள்ள கால்வாய்களில் குப்  பைகள் அகற்றப்படாமல் உள்ளது.  மேலும் குடியிருப்புகள் அதிகரிப் பால் குப்பைகளை அகற்ற போதிய ஏற்பாடு மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறை நிர்வாகத்திடம் இல்லை.

மேலும் கால்வாய்களில் கட்  டிட கழிவுகளைக் கொட்டி கால்  வாய்கள் இருந்த இடமே தெரியா மல் ஆக்கும் ஆபத்து உள்ளது. மாடக்குளம் கண்மாயில் இருந்து வீரமடையான் கண்மாய்க்கு செல்  லும் வாய்க்கால் பெரும் ஆக்கிர மிப்பில் பிடியில் உள்ளது. இதிலி ருந்து கொசுக்கள் அதிகளவில் உற்  பத்தியாகி பெரும் சுகாதாரச் சீர் கேடு ஏற்படுகிறது.  இதில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றால் அதற் கான நவீன இயந்திரங்களை மாந கராட்சி நிர்வாகம் கொண்டு வர வேண்டும் அல்லது சிறிய அளவில்  உள்ள ஜேசிபி இயந்திரங்கள் மூல மாக கால்வாய்களில் உள்ள குப்  பைகளை சுத்தம் செய்ய முடியும்.  மாநகராட்சி ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வண்டியூர் கண்மாய், பந்தலக்குடி வாய்க்கால் என்று சுத்தம் செய்யும் பகுதிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி அவ்வப்போது சுத்தம் செய்கிறார்கள் ஆனால் சிந்தாமணி வாய்க்கால், கிருது மால் நதி வாய்க்கால், அவனியா புரம் கால்வாய் போன்றவை துவங்  கும் இடத்தில் இருந்து சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் இதுவரை இல்லை.  எனவே மாநகராட்சி நிர்வாக மும் பொதுப்பணித்துறை நிர்வாக மும் இக்கால்வாய்களை சுத்தம் செய்து, நீர்வழிப் பாதைகளை சீர மைக்க உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.