மதுரை, ஆக.7- தீக்கதிர் செய்தி எதிரொலியாக மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் உடைப்பு சீர மைப்புப் பணியை மேற்கொண்டது. மதுரை மாநகராட்சி 23- வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு குறித்துக் கடந்த வியாழனன்று தீக்கதிரில் செய்தி வெளியா னது அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பீரவின் குமா, துணை மேயர் தி. நாகராஜன் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் ஆகியோர் செல்லூர் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டனர். இப்பிரச்சனை குறித்துக் கூறிய மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், “செல்லூர்-குலமங்கலம் பிரதான சாலை, தாகூர் நகர் சந்திப்பு பகுதிகளில் தொடர்ச்சியாகக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களாகத் தொடர்ச்சியாகக் குடிநீர் குழாய் உடைப் பைச் சரி பார்க்கும் பணி நடைபெற்றது இனி குடிநீர் தடையின்றி கிடைக்கும்” என்றார்.