மதுரை மாநகராட்சி செல்லூர் 23 ஆவது வார்டு 60 அடி சாலையில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் மாநகராட்சி ஊழியர்களை தொடர்பு கொண்டு மழை நீரை அப்புறப்படுத்துவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்தார்.இப்பணிகளை மாமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டார்.