மதுரை மாநகராட்சி 80வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை மேயர் தி.நாகராஜன், 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் மற்றும் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினர்.