மதுரை, நவ.6- தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மதுரை அரசரடி பகுதியில் இயங்கி வரும் மத்திய சிறை அங்காடியில் தீபாவளி இனிப்புகள், காரங் கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை மதுரை மத்திய சிறைத் துறை டிஐஜி பழனி விற்பனைக்கு துவக்கி வைத்தார். இங்கு ரூ.449-க்கு ஒன்பது வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் அடங்கிய இனிப்பு வகைகள் அடங்கிய தொகுப்பு கிடைக்கிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கி வந்த சிறை அங்காடி, திங்கள் முதல் இரவு 10 மணி வரை இயங்கும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் இனிப்பு வகை கள் ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள் ளிட்ட மாவட்ட சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.