districts

img

மதுரை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் சங்க துவக்க விழா

மதுரை, நவ.6-  சிஐடியு மதுரை புறநகர் மாவட்  டக் குழு சார்பில் மதுரை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் சங்க துவக்க விழா மற்றும் ரூர்  கேலா - அகில இந்திய ஒர்க்கிங்  கமிட்டி முடிவு பேரவை சனிக்கிழ மையன்று திருப்பரங்குன்றம் கே.பி.ஜானகியம்மாள் நினை வரங்கத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலை வர் கே.அரவிந்தன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் துவக்கி வைத்தார். மாநில உத வித் தலைவர் கே.விஜயன், மாவட்ட  துணைத்தலைவர் பொன்கிருஷ் ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர்.  இதில், சங்கத்தின் தலைவராக எஸ்.உதயகுமார், செயலாளராக எம்.சந்திரசேகர், பொருளாளராக சி.மாரிபாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து அகில இந்திய ஒர்க்கிங் கமிட்டி முடிவுகள் குறித்து நடைபெற்ற பேரவைக்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஜி.கௌரி தலைமை வகித்தார். பி.சிங்காரன் விளக்கிப் பேசினார்.  முன்னதாக மே மாதம் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் நடைபெற்ற நடை பயணத்தில் பங்கேற்ற சிஐடியு மதுரை புறநகர் மாவட்டக்குழு நிர்  வாகிகள் ஜி.கௌரி மலை, கண் ணன், நல்.மூர்த்தி, மாயத்தேவன், தனபாண்டியன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.