மதுரை, ஆக.14- மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் பொறுப்பேற்றார். மதுரை மாநகர காவல் ஆணையர் பொறுப்பிலிருந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற நிலை யில் மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் திங்களன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்தவும், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் காவல்நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் காவல் ஆணையர்.