districts

img

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச வாகனங்கள் பற்றாக்குறை

பொதுமக்கள் புகார் விருதுநகர், அக்.26- விருதுநகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் பிரசவ வார்டில் பிர சவித்த தாய் மற்றும் குழந் தையை ஏற்றிச் செல்லும் இலவச வாகனம் ஒன்று மட்டுமே உள்ளதால் பல  மணி நேரம் பிஞ்சுக் குழந்தை யுடன் தாய் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் இராம மூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை இயங்கி வருகிறது.  இச்சாலையின் தெற்கு பகு தியில் பிரசவ வார்டு உள்  ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கர்ப்பி ணிப் பெண்கள் பிரசவத்திற் காக சேர்க்கப்படுகின்றனர். பிரசவம் முடிந்து கைக்குழந்  தையுடன் தாயை அவர் களது சொந்து ஊருக்கு அழைத்துச் செல்ல இல வச வாகனம் இம்மருத்துவ மனையில் உள்ளது. ஆனால், ஒரு வாகனம் மட்டுமே உள்ளதால், பிர சவித்த தாய்மார்கள் பிஞ்சுக்  குழந்தைகள் மற்றும் உற வினர்களுடன் மருத்துவ மனை வளாகத்திலேயே காத்து கிடக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சுழி அருகே உள்ள உச்சம்பட்டி புதூரைச் சேர்ந்த பெரிய சாமி என்பவர் கூறுகையில்,  எனது சகோதரி கார்குடை யாளை பிரசவத்திற்காக கடந்த அக்.18 இல் இங்கு  சேர்த்தோம். பெண் குழந்தை  பிறந்தது. அக்.26இல் வீட்  டிற்கு போகலாம் என மருத்து வர்கள் தெரிவித்தனர். இன்று  (26.10.2024) ஒரே நாளில் 29  பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட னர். தாய், சேயை இலவச மாக வீடுவரை கொண்டு செல்ல அரசு வாகனம் இங்கு  உள்ளது. அது வெவ்வேறு  பகுதிக்கு செல்கிறது. எங்  களை ஏற்றிச் செல்லவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்தி ருக்கிறோம் என தெரிவித்த னர். எனவே, மாவட்ட நிர்வா கம், பிரசவ வார்டில் தாய்  மற்றும் பிஞ்சுக் குழந்தை களை இலவசமாக வீடு வரை  அழைத்துச் செல்லும் வாக னங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.