விருதுநகர், ஏப்.1- ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினமே பணப் பலன்களை வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வேண் டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சிறப்புத் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 91 மாத டி.ஏ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப் போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கம். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, விருதுநகர் பணி மனை முன்பு நடை பெற்ற இப்போராட்டத்திற்கு முத்து ராஜ் தலைமையேற்றார், மண்டல பொருளாளர் எம்.கார்மேகம் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி உரையாற்றினார். மேலும் இதில். நல அமைப்பின் மண்டல பொதுச் செயலாளர் ஆர்.போஸ் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும். விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து பணிமனை முன் பும் இப்போராட்டம் நடைபெற்றது.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் பணிமனையில் கிளை நிர்வாகி முனீஸ்வரன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க பொதுச் செயலாளர் வெள்ளத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கப்பழம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் வத்திராயிருப்பு பணி மனையில் கிளை நிர்வாகி பெரிய சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய சங்க பொதுச்செயலா ளர் வெள்ளத்துரை ,ஒய்வு பெற்றோர் மாவட்ட செயலாளர் தங்கப்பழம் ஆகி யோர் பேசினர். ராஜபாளையம் கிளை 1, கிளை 2ல் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.