நாகர்கோவில். மார்ச். 7- குமரி மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நாகர்கோவில் ரயில்வே சந்திப்பு, அண்ணா பேருநது நிலையம் பகுதியில் பணி செய்யும் பெண்கள் கல்லூரி மாணவிகள். உள்ளிட்டோருக்கு.துண்டு பிரசுரங்களை மாவட்ட பொருளாளர் எம்.சித்ரா தலை மையில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தங்கமோகனன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.