குழித்துறை, பிப்.19- குமரி மாவட்டம், களியக்காவிளை அரசு முஸ்லிம் தொட க்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை திருச்சூர் ஜூவல்லரி மேலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், விளக்கிப் பேசினார். இக் கண்காட்சியில் கோள்களின் சுற்றுவட்டப் பாதையும் அணிவகுப்பும், தண்ணீர் மறுசுழற்சி முறைகள் மற்றும் உணவுப் பொருள்கள், இயற்கை சம்பந்தமான மாதிரிகள் உள்பட 50 க்கும் மேற்பட்ட மாதிரிகள் கண்காட்சி யில் வைக்கப்பட்டிருந்தன. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி, கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி உறுப்பினர் மு. ரிபாய் மற்றும் பெற்றோர் பார்வையிட்ட னர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாதிரிகள் குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.