சிவகங்கை, ஜூலை 25- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தேவ கோட்டையில் ராம்நகர் அழகப்பா பூங்கா அருகில் கலை இலக்கிய இரவு நடை பெற்றது. இந்நிகழ்விற்கு வரவேற் புக்குழுத் தலைவர் போஸ் தலைமை தாங்கினார். செய லாளர் வழக்கறிஞர் ஞான சுப தர்ஷினி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முனை வர் அன்பரசன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டத் தலைவர் முனை வர் தங்க முனியாண்டி, மாவட் டப் பொருளாளர் பாலமுரு கன், மாநிலக் குழு உறுப்பி னர் ஜீவசிந்தன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேவகோட்டை வட்டார அள வில் அரசுப் பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை யும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை யும், விளையாட்டுத் துறை யில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதனை படைத்த மாணவர்களையும், மாற்றுத்திறன் பெற்ற மாண வர்களுக்கான விளை யாட்டுப் போட்டியில் சாதனை படைத்த நிர்மல் சிறப்புப் பள்ளி மாணவியர் ஆகியோர் பாராட்டப்பட்ட னர். நகர்மன்றத் தலைவர் சுந்தரலிங்கம், ரோட்டரி சங்கத் தலைவர் கதிரேசன், வழக்கறிஞர் ராம்ஜி, கான் சோவில் மைய இயக்கு நர் சிரில், ராம்நகர் பங்குத் தந்தை வின்சென்ட் அமல் ராஜ், நகர் மன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கேடயங்களையும் பரிசு களையும் வழங்கிப் பாராட்டி னர். கரிசல் கருணாநிதி குழு வினரின் கிராமியப் பாடல் கள், புதுகை பூபாளம் குழு வினரின் அரசியல் நை யாண்டி நிகழ்ச்சி, உலக சாத னையாளர் சேலம் துர்கா வின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவிஞர் நந்தலாலா உரை யாற்றினார். நிகழ்வுகளை. இராசு தொகுத்து வழங்கி னார். பொருளாளர் வழக்கறி ஞர் மரிய ஜெயபால் நன்றி கூறினார். இந்நிகழ்வில் தேவகோட்டை ராமநகர் பகுதியைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக தேவ கோட்டை தியாகிகள் பூங்கா விலிருந்து கலைப் பேரணி யை மாவட்டத் துணைச் செய லாளர் இராசேந்திரன் தொட ங்கி வைத்தார்.