மதுரை சித்திரை திருவிழா முடிந்து கள்ளழகர் தங்க பல்லக்கில் இருப்பிடம் சேர்தல் நிகழ்ச்சி மே 9 செவ்வாயன்று நடைபெற்றது. மே. 10 ஆம் தேதி காலையில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள்,உதவி பொறியாளர்கள்,உள்துறை பேஷ்கார்கள்,திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவி சௌந்தர்யா பிளஸ்-2 தேர்வில் 566 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதன்மை பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியை பாராட்டி வாழ்த்தினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானாமதுரை ஒன்றியத் தலைவர் காசிராஜன் மகன் கவியரசு 447மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.