districts

img

கலசலிங்கம் பல்கலை.யில் முப்பெரும் விழா

திருவில்லிபுத்தூர்,பிப்.1- திருவில்லிபுத்தூர் கலசலிஙகம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மன்றம் சார்பில், சென்னை ,தேசியச் சிந்தனைக் கழகத்துடன் இணைந்து, ”இராமலிங்க  வள்ளலார் 200வது ஜெயந்தி, ”தியாகி கள் தினம்”, ”சுதந்திரம் 75” என்ற முப்  பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் முனைவா்.க.ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டா் அறிவழகி  ஆகியோர்  தலைமை வகித்தனர். பல்கலைக்கழக துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் வே.வாசுதேவன் ஆகியோர்  வாழ்த்துரை யாற்றினா்.சென்னை, தேசியச் சிந்தனைக் கழக ஒருங்கி ணைப்பாளர் ம.கோ.சி. இராஜேந்தி ரன், அழகப்பா பல்கலைகழக முன்  னாள் துணைவேந்தர் என். இராஜேந்தி ரன் மற்றும் மணிப்பூர் இந்திய தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குநர் கிருஷ்ண பாஸ்கர்  ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.