திருவில்லிபுத்தூர், டிச.10- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கலச லிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் 35 வது பேட்ச் டி.பார்ம், 31வது பேட்ச் பி.பார்ம், 7 வது பேட்ச் பார்ம் டி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி செய லாளர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் நா.வெங்கடேஷன் வர வேற்றார். வத்திராயிருப்பு அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் வி. பாலகிருஷ்ணன் , சிவகாசி இஎஸ்ஐ மருத்து வமனை மருத்துவர் மயக்கவியல் நிபுணர் எம். ஜெகநாத் பிரபு ஆகியோர் உரையாற்றினர். கலசலிங்கம் பல்கலை. பதிவாளர் முனைவர் வி.வாசு தேவன், கலசலிங்கம் மருத்துவ கல்லூரி- மருத்துவமனை, டீன் சேவியர் செல்வா சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரிக்கும் ,மெட் பிளஸ், அரவிந்த் ஹெர்பல் நிறுவனங்களுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.