திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருத்துவக்கல்லூரி -மருத்துவமனை, கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி-நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி கலசலிங்கம் பல்கலைக்கழக துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் நா.வெங்கடேஷன் வரவேற்றார். கலசலிங்கம் மருத்துவ கல்லூரி -மருத்துவமனை டீன் சேவியர் செல்வ சுரேஷ் முன்னிலையில், திருவில்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம். சபரிநாதன் , நகரசபை தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் , நகர காவல் ஆய்வாளர் ஆர். கீதா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனர்.